Skip to main content

சமூக - புலன் விசாரணை

மசூதியில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதி: இந்து அமைப்பு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது கேரள உயர் நீதிமன்றம்

https://tamil.thehindu.com/india/article25193870.ece

முடியிருக்கிற வீட்டு கதவை தட்டலாம் திறந்திருந்தா கூட பரவாயில்ல ஆனால் சுத்தி சுத்தி ஓப்பனாக விரிச்சோடி கிடக்கும் காலி கிரவுண்டுல போய் ஏண்டா தட்றிங்க..

எந்த பள்ளிவாசலிலும் முஸ்லிம் பெண்கள் வருவதற்கோ தொழுவதற்கோ தடை ஏதுமில்லை..

ஆனால் அந்நிய ஆணும் பெண்ணும் சேர்த்து தொழ அனுமதி இல்லை..

தமிழகம் உட்பட உலகில் பல இடங்களில் பெண்களுக்கு தனியாக இடமும் ஆண்களுக்கு தனியாக இடமும் இருக்கத்தான் செய்கிறது..

புனித மக்காவிலும் மதீனாவிலும்  தொழும் காட்சியை பார்க்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இந்த உண்மையை  அறிய முடியும் எனும்போது இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் இஸ்லாமிய அறிவோ உலக அறிவோ அறவே இல்லாதவராகத்தான் இருக்க முடியும்..

மீண்டும் சொல்கிறோம் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் பள்ளிவாசல்களில் பெண்களும் தொழுவதற்க்கு முழு சுதந்திரமான அனுமதியுன்டு.

 அதிலும் தமிழ் நாட்டில் உள்ள பள்ளிவாசல்களை விட கேரளாவில் உள்ள பள்ளிவாசல்களில் பெண்கள் தொழுவதற்க்கு வசதிகள் அதிக கட்டமைப்புள்ளது.

 இந்த அமைப்பினர் தேவை இல்லாமல் சபரிமலை விசயத்தை பற்றியும் சில விச துளிகளை கக்கியுள்ளார்..

இதனால் இந்து சமுதாய மக்களின் வெறுப்பையும் முஸ்லீம்களுக்கு எதிராக தூன்டும் விதமாகவும் இருக்கிறது.

மக்கள் இவர்களின் பின்புலத்தையும் ஆராயவேண்டும்.

*குறிப்பு :-* பெண்கள் மசூதியில் தொழுவதற்க்கு எந்த தடையும் இல்லை.... அதே போல் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்று அவர்களின் மத சட்டம் இருந்தால் அதை திருத்தம் செய்ய எந்த தனி மனிதனுக்கும் உரிமை இல்லை.

முஸ்லீம் பெண்கள் பள்ளிவாசலில் தொழ அனுமதி உள்ளது அதற்கான ஆதாரம்

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்’

என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 900, 873, 5238.

பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களை அனுமதியுங்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 865, 899.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பெண்களும் வைகறைத் தொழுகையில் கலந்து விட்டு இல்லம் திரும்புவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

நூல்: புகாரி 578, 372, 867, 872

.’நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்டு விட்டால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். (தொழுகையில் கலந்து கொண்ட) அக்குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக் கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல்: புகாரி 707, 862, 708, 709, 710, 868.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவுத் தொழுகையைத் தாமதமாகத் தொழுதனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று ‘பெண்களும் சிறுவர்களும் உறங்குகின்றனர்’ என்று தெரிவித்தார்கள்.

நூல்: புகாரி 866, 569, 862, 864.

தொழுகை முடிந்தவுடன் பெண்கள் முதலில் வெளியே செல்லும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மற்ற ஆண்களும் தமது இடத்திலேயே அமர்ந்திருப்பது வழக்கம்.

நூல்: புகாரி 875, 837, 866

- சமூக - புலன் விசாரணைsamugapulanvisaranai

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...