Skip to main content

Posts

Showing posts from November, 2018

வெளிநாட்டில் வாழ் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்

இந்திய வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பல்வேறு காரணங்களால் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்வதற்கும் அவ்வாறு நீக்கப்பட்டிருந்தால் கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி தங்களை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.. · முதலில் https://www.nvsp.in (National Voters Service Portal) எனும் வெப் சைட்டினுள் நுழையவும். · பிறகு ‘Apply online for registration of Overseas voter’ எனும் பட்டனை தேர்வு  செய்தால் ‘Form 6A’  வெளிப்படும். · உங்களுக்கு தேவையான மொழியை (ஹிந்தி/ஆங்கிலம்/மலையாளம்) தேர்வு செய்யவும். ·பிறகு கேட்கப்பட்டுள்ள விபரங்களை தெளிவாக பதிவு செய்யவும். விண்ணப்பத்தை நிரப்புவதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விடியோவை பார்த்து பலன் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம் https://youtu.be/6Yo9go4bsBI

பெயரை மாற்றினால் வரலாறு மாறிவிடுமா / அல்லது மறைந்துதான் விடுமா??

இந்தியாவில் உள்ள பல இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயர் மாற்றம் - பாஜக சதி திட்டம் http://news7tamilvideos.com/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2.html இஸ்லாமிய பெயர் கொண்ட நகரங்களின் பெயரை மாற்றினாலும் இந்த தேசத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களையும் அர்பணிப்பையும் யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.. வரலாற்றில் இஸ்லாமிய பெயரை பார்த்து தொடை நடுங்கிய காவிகூடாரம் என எழுதப்படும்.... ஆங்கிலேயேன் முதல் காவி கபோதிகள்வரையிலும் இஸ்லாமிய பெயரை கண்டாலே அஞ்சி நடுங்கியவர்கள் என நாளைய தலைமுறை பேசும்.. மாற்றுங்கள் அனைத்து பெயர்களையும் மாற்றுங்கள் அதோடு சேர்த்து அமித்ஷா பெயரையும் மாற்றுங்கள் அமித்ஷா பெயர் பாரசீக பெயராம் அதை மாற்ற முயற்சி செய்யுமா பாஜக?? இந்தியாவை இஸ்லாமியர்கள் லோடி கில்ஜி முகலாய பேரரசுகள் 850 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்திருக்கிறது ஆனால் நேற்றைய பாசிச அரசு. பெயரை மாற்றினால் வரலாற்றை மாற்றிவிடலா

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள் நிறுத்த

ராஜலட்சுமியை தொடர்ந்து இப்போது சொளமியா

தருமபுரி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார் https://tamil.thehindu.com/tamilnadu/article25463412.ece இனி எத்தனை காலம் தான் இந்த அவலம் தொடரும்???  நீதிமன்றங்கள் தண்டனையை கடுமை ஆக்கினால் மட்டுமே இந்த கேடுகெட்ட குற்றங்கள் குறையும்.. சவுமியா உயிர் பறித்தது கயவர்களா? உயிரற்ற அரசு எந்திரமா? தர்மபுரி மாவட்டம் அரூர் கோட்டப்பட்டி, பழங்குடி சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை. மலர் தம்பதியினரின் மகள் சவுமியா (17), அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 6ம் தேதி, அதேபகுதியை சேர்ந்த ரமேஷ்,சதீஷ்  என்ற இரண்டு அயோக்கியர்கள் சவுமியாவை பாலியல் கொடுமை செய்துள்ளனர். தன்னைக் காத்துக் கொள்ள சவுமியா நடத்திய போராட்டத்தில் ஆத்திரமடைந்த அயோக்கியர்கள் சவுமியாவை கொடூரமாக தாக்கியுள்ளனர். மாலையில் மகளை அழைத்துக்கொண்டு கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். காவலர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து,மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் புகாரை பெற மறுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் கவணத்திற்கு எடுத்து

நவம்பர் - 11, தேசிய கல்வி தினம்

தேசிய கல்வி தினம்!   நவம்பர் 11, (சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மெளலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்.) இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாள்தான் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. 1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி... அரேபியர்களான மௌலானா முஹம்மத் க்ஹைருத்தீனுக்கும் ஆலியாவுக்கும் மகனாக... சவூதி அரேபியாவின் மக்கா நகரில் பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத் எனப்பட்ட குலாம் முஹினுத்தின். அரபுத்தாய்க்கு பிறந்தவர் தன் ஆரம்ப கல்வியறிவை தாய்மொழி அரபியில் கற்றவர் பிறகு பல மொழிகளையும் கற்று, உயர் கல்வியறிவை எகிப்தின் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்திலும் கற்றார். சே குவாரா அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்கு போராடியதுபோல... குலாம் முஹினுத்தின் இந்தியா வந்து பிரிட்டிஷ்க்கு எதிராக விடுதலைக்கு போராடியவர். இங்கு வந்து ஹிந்தி உருது ஆகிய மொழிகளை கற்று அவற்றில் புலமை பெற்றார். விடுதலை வேட்கைக்காக நிறைய எழுதினார்.  பலமுறை பல வருஷங்கள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்து சிறை சென்ற தியாகி. மவுலானா

புதிதாக தொழில் தொடங்குவதை பற்றிய தகவல்

தொழில் தொடங்க உரிமம் பெறுவது எப்படி? முழு விவரம்.? அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும். ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம்.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும்.  தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும். யாருக்கு தொழில் உரிமம் தேவை? ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும். குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்க

வரலாற்றை மறைக்க முடியும் ஆனால் ஒருபோதும் அழிக்க முடியாது.

இந்துத்துவா அமைப்புகள், காவி கும்பல்கள் திப்பு சுல்தான் என்பவர் ஏதோ இந்துக்களின் விரோதி போல ஒரு பிம்பம் உருவாக்கி மக்கள் மத்தியில் போலியாக நச்சு கருத்தை பரப்புகிறார்கள்..  உண்மையில் திப்பு சுல்தான் என்பவர் யார்.?   மக்களுக்கு என்ன செய்தார்.? இந்துக்களையும் முஸ்லிம்களையும் இன்னும் பிற மக்களையும் எப்படி தனது ஆட்சி காலத்தில் நடத்தினார்.? என்பதை கீழே பார்ப்போம்.. https://youtu.be/ofoPyXno168 1767ஆம் ஆண்டில் தனது 17வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாணியம்பாடியில் முதல் வெற்றியை பதிவு செய்தார்  திப்பு சுல்தான்.. பின்பு இவர் போர் செய்த அனைத்திலும் பெரும்பாலும் வெற்றியே பெற்றார் திப்பு சுல்தான்.. ஆங்கிலேயர் இவரின் வலிமையை கண்டு வியந்து போனார்கள்.. "யுத்தங்களை போர்களத்திலேயே முடித்து கொள்ளுங்கள். ஒருபோதும் அப்பாவி மக்களின் மீது வன்முறை நடத்த கூடாது. பெண்களை கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள். குழந்தைகள், முதியோர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்" என்று எழுத்து முலம் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.. NASA விண்வெளி நுழைவ

லால்பேட்டையில் தொடரும் வெறிநாய்களின் வெறிச்செயல் கண்டுக்கொள்ளாத பேரூராட்சி

"லால்பேட்டை முழுவதும் சுற்றித் திரியும் சொறி | வெறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். லால்பேட்டையில் சில மாதங்களாக வெறி நாய்கள், சொறி நாய்கள்  தொல்லை பெரும் பிரச்சினையாக, பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. லால்பேட்டை நகர் மக்கள் தொகை பெருக்கத்திலும், நகரின் எல்லை விரிவாக்க வளர்ச்சியிலும் உச்சம் அடைந்து வருகிறது. அதே நேரம் வெறி நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும், தெருக்களில் தளர் நடை போடும் முதியவர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது பேரூராட்சி.. தெருவில் விடப்படும் நாய்கள் குட்டி போட்டு பல மடங்காக பெருகி வருகிறது. அவை முறையாக பராமரிக்கப்படாததால் கிருமிகள் தாக்கி சொறி பிடித்து, நாக்கில் எச்சில் வடிந்து சொட்ட சொட்ட, பொதுமக்களை கடித்துக் குதற, தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து பொதுமக்களை காக்கும் நல் எண்ணத்தோடு பேரூராட்சி தலைவர் முன்வ

சட்டப்பிரிவு 49P பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருந்தது ஏன்?

49P என்கிற சட்டப்பிரிவு கூறுவது இது தான்:-  இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 18 வயதை கடந்துவிட்டால் வாக்களிக்கும் உரிமையை பெற்றுவிடுவார்கள்.  இதற்காக அவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டால் இந்தியாவில் அவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் எந்த ஒருவரும் தனது ஓட்டை மட்டுமே போட வேண்டும். யாராவது கள்ள ஓட்டாக நம் ஓட்டை போட்டுச் சென்றுவிட்டார் அதற்கு 49P தீர்வாகிறது. இந்த வகையில் நமது ஓட்டை ஒருவர் போட்டுச் சென்றுவிட்டார், உண்மையில் அந்த ஓட்டுக்கு உரியவர் நாம் தான் என்கிற ஆதாரத்தை நாம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.  இதனை அவர் ஏற்கும் பட்சத்தில் நமது ஓட்டை வேறு யாரும் போட்டுச் சென்று இருந்தாலும் கூட நாமும் ஓட்டுப்போட முடியும். ஆனால் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டோம். மாறாக நமக்கு வாக்குச் சீட்டு தருவார்கள். அதில் நாம் நமக்கு பிடித்த நபரின் பெயருக்கு அருகே பெருக்கல

நவம்பர் - 10, மாவீரன் திப்பு சுல்தான் பிறந்த நாள்

மதச்சார்பின்மையின் முன்னோடி மாமன்னர் வீரன் திப்பு சுல்தான் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்று தகவல்கள்.! மைசூரை ஆண்ட மாவீரன் திப்பு சுல்தான் இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் பன்முக ஆளுமையாக திகழ்ந்தவர். இந்திய விடுதலை போரில் இவரின் பங்களிப்பு யாராலும் மறைக்க இயலாதது. திப்பு சுல்தான் குறித்து 'இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் உருவாக்கம்' என்று 1930 'யங் இந்தியா' இதழில் மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான் என்று ஜவகர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார். 1790-ம் ஆண்டு பிரிட்டிஸ், பிரன்ச்சு அரசுகளுக்கு எதிராக உலகின் முதல் ராக்கெட் ஏவுகணையை ஏவினார் திப்பு. இந்துக்களின் புகழ்பெற்ற சாரதாதேவி கோவிலை மறுநிர்ணயம் செய்ய முழு பொருளுதவியையும் வழங்கினார் திப்பு சுல்தான். தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலை போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, கோபால் நாயக்கர் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு உந்து சக்தியாய் விளங்கினார் திப்பு. தான் திப்புவை கண்டு அஞ்சுவதாக 1798-ம் ஆண்டு தமது க

Section 144 என்றால் என்ன?

144 தடை உத்தரவு என்பதன் விளக்கம் ... குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 144 என்பது அவசர காலங்களில் பொது அமைதியை காக்க உத்தரவுகளை வழங்கும் அதிகாரங்களைப் பற்றியது. இதில் சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடும் கூட்டங்களை தடை செய்யும் அதிகாரத்தினை அரசுக்கு வழங்குகிறது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 என்பது சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக கூடினால் வழங்க வேண்டிய தண்டனையைப் பற்றி கூறுகிறது. உண்மையில் சட்ட விரோதமான கூட்டம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141 ல் கூறப்பட்டுள்ளது. அதன் படி 5 அல்லது 5 க்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினால் அது சட்ட விரோதமான கூட்டம் எனப்படும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 ன் படி, சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடினால் 6 மாதங்கள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 ன் படி, சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக உயிரிழப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் கூடினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். 5 பேர்களை விட குறை

நத்தம் நிலம் என்றால் என்ன ?? அதற்கு வீட்டு கடன் கிடைக்குமா??

நத்தம் இடத்தில் வீடு கட்ட வங்கியில் கடன் கிடைக்குமா? ================================== படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்!  ******************************************** “பல வருடங்களுக்குமுன் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலத்தை கிராமத்தில் வசிக்கும் மக்கள் வீடு கட்டுவதற்கு அரசாங்கம் தந்தது. இப்படி கொடுத்த நிலத்தை நத்தம் நிலம் என்பார்கள். அதற்கு அந்தக் காலத்தில் பட்டா கிடையாது. ஆனால், அது வீடு கட்டுவதற்கு உகந்த நிலம். அதை வாங்கலாம் அல்லது விற்கலாம். இப்போது நத்தம் நிலத்துக்கு சில பகுதிகளில் பட்டா அளிக்கின்றனர். இந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றால் வங்கியில் வீடு கட்ட கடன் கட்டாயம் கிடைக்கும்.”

மறக்க முடியுமா? நவம்பர் - 08

கும்மிருட்டில் குண்டூசி தேடிய மோடி இரவு நேரம் வெளியூர் சென்று விட்டு திரும்பும்வழியில் திடீரென அறிவிக்கப்படுகிறது நீங்கள் கையில் வைத்திருக்கும் உங்களுக்கு சொந்தமான பணம் இனி செல்லாது என்ற மோடியின்  அறிவிப்பு நாட்டு மக்கள் செய்வதறியாது நடுத்தெருவில் நாதியற்றவர்களாய் நிறுத்தப்பட்டார்கள் பணமின்றி  நோய் குணப்படுத்தமுடியாமல் நோயாளிகள் திணறினார்கள் வங்கி வருசையில் நின்று வயோதிகர்கள் மடிந்தார்கள் நாங்கள் எத்தனையோ வங்கி வரிசையை பார்த்து விட்டோம் ஒரு வரிசையிலும் அதானியும் அம்பாணியும் நிர்கவில்லை ஸ்டார் நடிகர்களும் நிர்கவில்லை அரசியல் ஜாம்பவான்களும் இல்லை வங்கி வரிசையில் நின்றது எல்லாமே ஏழைகள் நடுத்தர வற்க்கத்தினர்கள் கருப்பு பணத்தை பிடிக்க போகிறோம் என்றார்கள் கருப்பு பணத்திற்கு சொந்தக்காரர்கள் யாருமே அன்று வரிசையில் காணமுடியவில்லை பாசிச ஆட்சியின் காலமும் முடியப்போகிறது கலர் கலராக புதுப்புது பணம் அச்சடித்தார்கள் ஆனால்  அந்த கருப்பு பணத்திற்கு மட்டும்  இன்னும் விடை காண முடியவில்லை

நள்ளிரவில் நடந்த ஓர் நாடகம்!

முட்டாள்கள் தினம் ஏப்ரல் 01 இல்லை நவம்பர் 08 தான் என்பதை பாரத பிரதமர் மோடி உறுதி செய்த நாள்? நவம்பர் - 08 இந்திய பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்ட நாள் கருப்பு பணத்தை பிடிக்கிறோம் என்றார்கள்? பணமில்லா பொருளாதாரம் என்றார்கள்? பணமுதலைகள் இனி தப்பமுடியாது என்றார்கள்? டிஜிட்டல் இன்டியா என்ற கதை அளந்தார்கள்? நடந்தது 105 உயிர் போனது, சாமானியன் சீர்குலைக்கபட்டான் கருப்பு பணத்தை கண்டுபிடிக்க ஏழைகளின் கோமணத்தில்... இருப்பு  வைத்திருந்த பணத்தையும் கோமணத்தோடு சேர்த்து,  உருவி எடுத்த திட்டம் தான்  இந்த டீமானிடிசேசன். நாலு பேர் நல்லாருக்க, நாட்டு மக்களையே தெருவுக்கு கொண்டு வந்த பெருமை மோடியையே சாரும்! Demonitisation in India (2016) A Monumental Disaster (மிகப்பெரிய கேடு) An Organised plunder (திட்டமிட்ட சூறையாடல்) A Legalised Loot (சட்டத்தின் அனுமதி பெற்ற கொள்ளை) An Economical Earthquake (பொருளாதார பூகம்பம்)

மனு எழுதுவது பற்றிய தகவல்!

மனு எழுதுவது எப்படி ? 1. மனுவில் உங்கள் பெயர் முகவரி இருக்க வேண்டும். 2. மனு யாருக்கு அனுப்பப் படுகிறதோ ? அவரின் பெயர் / பதவி மற்றும் முகவரி இருக்க வேண்டும். 3. மனுவில் பொருள் இருக்க வேண்டும். எதற்காக மனு அளிக்கப்படுகிறது ? என்று சுருக்கமாக எழுதவேண்டும். 4. மனுவில் 1,2,3...... என்று எண்கள் இடப்பட்டு பத்தி பத்தியாக சங்கதிகள் சொல்லப்பட வேண்டும். 5. மனுவின் வலது பக்கம் மூலையில் இடம், தேதி குறிப்பிடப்பட வேண்டும். 6.அனுப்புபவர் கையெழுத்தும் பெயரும் இருக்க வேண்டும். 7. ஆவணங்கள் இருந்தால் இணைக்கப்பட வேண்டும். 8. ஆவணங்கள் 1,2,3, என்று பட்டியல் இடப்பட வேண்டும். 9. மனுவை பணிவாகவே எழுத வேண்டும்.

பட்டா மாறுதல் பற்றிய தகவல்

நாம் வாங்கும் நிலத்தை பத்திரப் பதிவுத் துறையின் மூலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனுவும் சேர்த்தே சமர்ப்பிக்கிறோம். பதிவுத் துறையின் மூலமாகவே, நமது 'பட்டா மாறுதல் மனு' வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, வருவாய்த் துறையினர் இயல்பாகவே, நாம் வாங்கிய நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்து, நமக்குத் தர வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட ஆண்டு 1984. ஆனால், நடைமுறை அப்படியா இருக்கிறது? இல்லவே இல்லை! நிலத்தைப் பதிவு செய்துவிட்டு, 'பட்டா பெயர் மாறுதலுக்காக' வி.ஏ.ஓ., -விடம் போகிறோம். அவர் குறைந்த பட்சம் 4000 ரூபாயில் தொடங்கி நம்மிடம் எதிர்பார்க்கிறார். வெறும் பட்டா பெயர் மாறுதலுக்கோ, உட்பிரிவு உள்பட பெயர் மாறுதலுக்கோ 'சல்லிக்காசு' கூட கட்டணமில்லை. ஆனால் அவரோ, தாசில்தார், மண்டல துணை தாசில்தார் உள்பட, வருவாய்த் துறையின் அத்தனை மேஜைகளுக்கும் படியளந்துதான் பட்டா பெற முடியும் என்பதாக நம்மிடம் 'அளந்து', நம்மிடம் எதிர்பார்க்கும் தொகைக்கான 'பங்குத் தொகைப் பிரிப்புப் பட்டியலை' விரிக்கிறார். இந்தக் கொள்ளைய

அரசியல் கட்சிகளின் நன்கொடை விபரம் பற்றிய தகவல்

அரசியல் கட்சிகள், தகவல் சட்டத்தில் வருமா?                    ========================================================= அரசியல் கட்சிகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ) வரம்புக்கு உள்பட்டவையே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவை மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை பிறப்பித்தது. அரசியல் கட்சிகளின் வெளிப்படையான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 6 தேசிய கட்சிகள் மத்திய அரசின் நிதியுதவியை மறைமுகமாகப் பெற்று வருவதாகவும், ஆர்டிஐ சட்டத்துக்கு உள்பட்டு செயல்படும் அரசு அமைப்புகளுக்கு உள்ள சிறப்பம்சங்கள் அரசியல் கட்சிகளுக்கு உள்ளதாகவும் சிஐசி கூறியுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால் ஆகியோர், காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 அரசியல் கட்சிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் எழுதி இருந்தனர். நன்கொடையாக பெற்ற தொகை, நன்கொடை வழங்கியவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ள

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மதவெறி, சாதிவெறி, இயக்க வெறி, மொழி வெறி, கட்சி பூசல்கள், பணக்காரன் ஏழை என்ற பாகுபாடு..  போன்ற தீய குணங்களை தீயிட்டு கொளுத்தி....                                                                     மனிதநேயம், சகோதரத்துவம், ஒற்றுமை, சந்தோசம், கலப்படமில்லா நட்பு.. போன்ற நல்ல குணங்களை இந்த தீபத்திருநாளில் நமது எண்ணங்களின் மூலம் செயல்பாடுகளின் வாயிலாக இந்த உலகம் எங்கும் மிளிரச் செய்வோம்.                                                                         நமது முன்னோர்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களான.... அனைத்து சமூக மக்களுக்கு இடையில் மாமன் மச்சான் உறவுகளாய்,  உணர்வுபூர்வமான நட்போடு வாழும் ஒற்றுமையை, சகோதரத்துவத்தை, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காத மனப்பக்குவத்தை பேணி பாதுகாப்போம்.                                                                                    ஜாதி மதங்களின் பெயரால், அரசியல் காரணங்களை கொண்டு, நமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி, சகோதரத்துவத்தை சீர்கெடுத்து, கலவரத்தை தூண்ட நினைக்கும் தீய சக்திகளை ஜாதி மதம் வேறுபாடு கடந்து, ஒற்றுமை என்னும் கரம் கோர்த்து.. வேரற

இஸ்லாமியர்களும், ராமர் கோவிலும் இல்லையென்றால் பஜாவிற்கு அரசியல் இல்லை

நீதி மன்றம் மதப்பாகுபாடு காட்டுகிறதாம்.  வெடி வெடிக்க கட்டுப்பாடு போடுவதற்கு முன் பள்ளிவாசலில் உள்ள கூம்பு ஒலி பெருக்கிகளை அகற்றிவிட்டு வந்து வெடி கட்டுப்பாடு விதிக்க வேண்டுமாம் - எச்ச ராஜா. சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என தீர்ப்பு வந்த போது பாஜக வின் கூம்பு வடிவ ஒலி பெருக்கியான நார யமன் திருப்பதி என்பவர் முதலில் பள்ளிவாசலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியவை அகற்றி விட்டு வந்து எங்களுக்கு தீர்ப்பு வழங்குங்கள் என்று கூறியிருந்தார். ஆக பள்ளிவாசல் ஒலி பெருக்கி இவர்களுக்கு எவ்வளவு உறுத்தலாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. பாஜக வின் திருட்டுக் கூட்டமே, உங்கள் மீது எவ்வளவு செண்ட் பூசிக்கொண்டு நீங்கள் மக்கள் முன் வந்தாலும் அது மல நாற்றமாகத்தான் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளவும். இந்த நாட்டுக்கும், இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என தெரியாமலில்லை. நீங்கள் இந்த தேசத்தை திருடும் திருடர்கள். ரபேல் முதல் பட்டேல் வரை நீங்கள் எத்தனை கோடியை திருடியுள்ளீர்கள் என்பது மக்களுக்கு தெரியும்

பட்டியலின மக்களை தொட்டால் தீட்டு என்றால் அப்போ நீங்கள் யார்??

பட்டியலின மக்களின் பொது வழித்தடத்தை அடைத்து திடீரென அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை வேலி! தமிழ் மண்ணின் ஆதி குடிமக்கள் மண்ணின் மைந்தர்கள் தான் இந்த பட்டியலின மக்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா??.... தமிழ் மண்ணின் சொந்தக்காரர்கள்.. ஆதாரம் :- https://www.colourmedia.lk/2018/05/22/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ அப்படிப்பட்ட பூர்வ குடிமக்களான பட்டியலின மக்களை தொட்டால் தீட்டா?? "சாதிகள் இல்லையடி பாப்பா" - தவறு சாதியைத்தவிர வேரொன்றும் இல்லையடி பாப்பா.  இது தான் இன்றைய நிலை. திருப்பூர் அலகுமலை கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த வழியை மறித்து அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை கம்பி வேலியால் மக்களும், பள்ளி குழந்தைகளும் ஒரு கிலோ மீட்டர் தூரம் கிணற்றில் இருந்து நீர் எடுக்கவும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. http://news7tamilvideos.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%

UAPA என்னும் உபா சட்டத்தை பற்றிய தகவல்

UAPA சட்டம் என்றால் என்ன?  தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். UAPA (Unlawful Activities Prevention Act இதன் சட்ட விதிகள்: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டமானது, பயங்கரவாத ""பொடா'' சட்டத்தின் மறு அவதாரமாக புதிய கொடிய விதிகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. "பொடா'' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் கொட்டடியில் அடைத்து வதைக்க முடியும்.  பயங்கரவாத குற்றம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ, அல்லது வேறு ஏதாவது தடயமோ இருந்தால் நீதிமன்றம் அவரைக் குற்றவாளிதான் என்று கருதி இச்சட்டப்படி கைது செய்ய முடியும்.  தான் நிரபராதி என்பதைக் குற்றம்சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். நாட்டின் ஐக்கியம் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ,அல்லது அச்சுறுத்துவது போல "பாசாங்கு'' செய்தாலோ கூட இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய முடியும். ஒரு புலனாய்வுக்குத்தொடர்புடையது என்று கருதி போலீசு விவரம் கேட்டால் எவரும் முழுமை

இந்து முஸ்லீம் ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கும்

தீபாவளிக்கு இந்து கடைகளில் மட்டும் வாங்குவோம் மற்றவர்களை புறக்கணிப்போம் என்று போஸ்டர் ஒட்டி பிரச்சாரம் செய்து சங்கிகள் வெறுப்பை கக்கினாலும் ஆண்டாண்டு காலமாய் தொடரும் பந்தம் என்றும் மாறாது... நூற்றுக்கணக்கான ஆதரவற்ற  சொந்தங்களுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கிய வீரவநல்லூர் அல்ஃபா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்... எல்லாப்புகழும் இறைவனுக்கே... --------------------------------------------- இடம் - ராஜீவ் நகர், வீரவநல்லூர் - நெல்லை

லிபரான் கமிஷன் முன்பு நேரில் பார்த்த பத்திரிகையாளர் கொடுத்த வாக்குமூலம்

ராமர் கோயிலுக்காக 1992-ல் செய்ததுபோல் மீண்டும் செய்ய வேண்டி வரும் – ஆர்எஸ்எஸ் https://tamil.news18.com/news/national/will-launch-1992-like-agitation-for-ram-mandir-if-necessary-says-rss-66203.html ஆர்.ஸ்.ஸ் என்பது இந்தியவினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கம்.. இவர்கள் என்ன பேசினாலும் இதை விட மோசமாக பேசினாலும் நீதிமன்றங்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்கும்.. எந்த விதமான விசாரணையும் இவர்களுக்கு கிடையாது. அதற்கு முன் உதாரணம் நம் கண் முன்னே சமீபத்தில் நடந்த சம்பவம் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் சம்பவங்கள். இந்த நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கிறதா? நீதித்துறை என்று ஒன்று இருக்கிறதா? கலவரம் செய்வோம் என்று பகிரங்க மிரட்டல் விடும் RSS பயங்கரவாத இயக்கத்தை தடை செய்யாமல் இருப்பது ஏன்? என்பது சாமானிய மக்களில் கேள்வியாக இருக்கிறது.. 1992 - ல் செய்தது போல செய்வோம் என்று ஆர்ஸ்ஸ் சொல்கிறதே அப்படி  என்னதான் செய்தது என்ற கேள்விக்கு விடை இதோ.., லிபரான் கமிஷன் முன்பு வாக்குமூலம் அளித்த பத்திரிகையாளர். பாபர்மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி? நேரில் படம் பிடித்தவர் கொடுத

இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்?

இந்தியாவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 6 கோடி!  காணாமல் போன பெண்கள் எங்கே?? பாலின பாகுபாடு ஏன்? கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின்  எண்ணிக்கை 6 கோடி யை தொட்டுவிட்டது  என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டுரையாளர் சன்னி ஹண்டல். https://tamil.boldsky.com/insync/life/2018/63-million-plus-girls-are-missing-this-so-called-great-nation-india-020054.html நோபெல் பரிசு பெற்ற  அமர்த்தியா சென், 19990  லேயே 10 கோடி பெண்களுக்கு  மேல் காணாமல் போய்விட்டதாக  குறிப்பிட்டார். இந்த 6 கோடி பெண்கள் எங்கே போனார்கள்? 1.2 கோடி பெண்களில் 10 லட்சம் குழந்தைகள்  1 வருடம் கூட தாக்குப் பிடிப்பதில்லை. மேலும் 30 லட்சம் குழந்தைகள் 15 வயதிற்குள் மரணம் அடைகின்றனர். பெண் குழந்தைகள் இறப்புக்கு முக்கியக் காரணம் பாலினப் பாகுபாடு. இன்றைக்கும் பெண்குழந்தைக்கு ஒரு மாதிரியாகவும் ஆண்குழந்தைக்கு ஒருமாதிரியாகவும் சலுகைகள் கொடுப்பது வழக்கத்தில் இருக்கிறது. முந்தையத் தலைமுறையில் இந்தப் பாகுபாடு வெளிப்படையாக இருந்தது. பெண்குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்றவற

குண்டர் சட்டத்தை பற்றிய விவரங்களை..

குண்டர் தடைச் சட்டம் என்பது என்ன?  இந்தச் சட்டத்தின் முழுப்பெயர் சற்றே நீளமானது. The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug offenders, Goondas, Immoral Traffic Offenders, Forest Offenders, Sand Offenders, Slum Grabbers and Video Pirates Act, 1982. இதைத்தான் சுருக்கமாக குண்டர் தடைச் சட்டம் அல்லது குண்டர் சட்டம் என்கிறார்கள். யாரெல்லாம் இதன் கீழ் கைதுசெய்யப்பட வாய்ப்புகள் உள்ளன? இந்தச் சட்டத்தின்படி கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள்; விற்பவர்கள், போதைப்பொருள் விற்பவர்கள், சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் குண்டர்கள், பாலியல் தொழில்; ஆள் கடத்தல்; பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், வனங்களுக்கு ஊறுவிளைவிப்பவர்கள், மணல் கொள்ளையர்கள், நில ஆக்ரமிப்பாளர்கள், திருட்டு டி.வி.டி தயாரிப்பவர்கள், விற்பவர்கள் ஆகியோரை இந்த சட்டத்தின்படி கைதுசெய்ய முடியும். சட்ட நடைமுறைகள் என்ன? மேற்கண்ட குற்றங்களில் ஒருவர் தொடர்ச்சியாக ஈடுபடும்போது அவர் மேல் உள்ள வழக்குகளின் அடிப்படையில் கூடுதலாக அரசு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும். பொதுவாக, ஒருவர் கைது செய்யப்பட்டல் 20 முதல்