முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்?
அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும்.
பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்...
அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்...
வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல.
சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு:
அதிசய அரசியல்வாதி:
தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
-நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.
-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.
-நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.
-3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
-பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.
-எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை;
நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.
-பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
-ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.
-அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.
- இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்;
பதவியேற்காமலேயே மறைந்தார்.
-அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.
-இரயிலில் இலவசமாகப் போக மாட்டார்.
-சம்பளம் எதுவும் வாங்க மாட்டார்.
-அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்க மாட்டார்.
-கையைத் தலைக்கு வைத்து திண்ணையில் தூங்குவார்.
-வாழ்வில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர்.
-இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.
-ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார்.
தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.
-சொத்துக்கள் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.
-"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்.
-"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்.
-ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர்.
டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்;
திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்;
தூக்கி வைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.
அதுமட்டுமா?? மத நல்லிணக்கம் என்ற பெயருக்கு சொந்தக்காரர்..
தேவர், முஸ்லிம் உறவை உறக்கச் சொல்வோம் :
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர்.
முஸ்லிம் பெருமக்களால் தேவர் மகன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட பால்குடித்தாயின் பாசம் மறவாத உ.முத்துராமலிங்க தேவர்
தேவர் பெருமகனார் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார்.
அதற்கு முக்கியக் காரணம் உண்டு.
தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார்.
அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.
காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார்.
அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி. ஆயிஷாபீவி அம்மாள் இறந்துவிட்டார்.
ஆயிஷாபீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிஸார்(சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர்.
அந்த இஸ்லாமிய அம்மையார் இறந்து வெகு நேரமாகிவிட்டது...
மத சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது..
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது...
ஆனாலும் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்....
அவ்வபோது காவல்துறை உளவு பிரிவினர் ஜமாத்தார்களிடமும் குடும்ப உறுப்பினர் களிடமும் ரகசியமாக ஏதோ கூறி செல்கிறார்கள்...
சரி என்று அவர்கள் தலையாட்டுவதும் தெரிகிறது...
நேரம் செல்ல செல்ல காவல் துறையினர் நேரிடையாகவே மிரட்டுகிறார்கள் அவர் வந்தவுடன் அஞ்சலி செலுத்த நீங்கள் அனுமதிக்க கூடாது...
எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துறை மிரட்டுகிறது...
சரி அப்படியே செய்கிறோம் என்று ஜமாத்தார்கள் சொல்கிறார்கள்...
இதற்கிடையே ஒரு வில்லு வண்டி வந்து நிற்கிறது..
நீண்ட ஜிப்பா அடர்ந்த தாடி இஸ்லாமியர் போல தொப்பி அணிந்த ஒருவர் வண்டியில் இருந்து இறங்குகிறார்...
கண்களில் கண்ணீர் மெல்ல ஆயிஷா அம்மையாரின் சடலம் அருகே செல்கிறார்...
அந்த குடும்பமே அவரை தழுவி கைகளை பற்றி கொண்டு அஞ்சலி செலுத்த வந்த அவருக்கு ஆறுதல் சொல்கிறது...
அவரும் உடனடியாக வந்த வண்டியில் ஏறி விடை பெறுகிறார்...
உடனே ஜமாத்தார்கள் இறுதி ஊர்வலம் தொடங்க சொல்ல ...
ஊர்வலம் தொடங்குகிற நேரத்தில் காவல் துறை ஓடி வந்து கொஞ்சம் பொறுங்கள் எப்படியும் நாங்கள் எதிர் பார்க்கிற தேவர் அஞ்சலி செலுத்த வருவார் நாங்கள் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்...
இப்பொழுதுதானே வில் வண்டியில் வந்து தேவர் அஞ்சலி செலுத்திவிட்டு போகிறார் என்று சொல்ல...
ஏன் காவல் துறைக்கு தெரியபடுத்த வில்லை என்று மிரட்ட அந்த குடும்ப பெரியவர்கள் அமைதியாக சொன்னார்கள் ...
நம்பியவர்களை கைவிடாத குடும்பத்தில் உதித்த தேவருக்கு பாலூட்டி சிறு வயதில் வளர்த்தவர் ஆயிஸா அம்மையார்...
அந்த அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த எங்கள் வீட்டு மூத்த பிள்ளை தேவர் வந்து சென்றபோது நாங்கள் எப்படி எங்கள் பிள்ளையை காட்டி கொடுப்பது என்று சொல்ல காவல் துறை திரும்பி சென்றது...
தேவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார்..
தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீவிரமாக எதிர்த்தார்..
தேவர், முஸ்லிம்களை வெறுத்தவர்களை வெறுத்தார்.
தேவர், முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்.
பிரிவினை மற்றும. வெறுப்பு பிரச்சாரத்தை வேரறுப்போம்.
மனித சமூகத்தின் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவோம்.
சரித்திர சாலை சந்திப்புகள்" என்ற நூலில் இருந்து.
-IRA
அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும்.
பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்...
அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்...
வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல.
சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு:
அதிசய அரசியல்வாதி:
தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.
-நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர்.
-அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள்.
-நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர்.
-3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
-பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார்.
-எனக்கு, என் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை;
நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறுவார்.
-பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
-ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் வென்று ஒன்றை ராஜினாமா செய்வார்.
-அவர் போட்டியிட்ட அனைத்தும் தாழ்த்தப்பட்டோர் அதிகம் நிறைந்த தொகுதிகள்.
- இறுதிக்காலத்தில் உடல்நலக் குறைவால், வீட்டைவிட்டு வெளியேறாமல் படுத்த படுக்கையிலே இருந்தும், வென்றார்;
பதவியேற்காமலேயே மறைந்தார்.
-அரசு சலுகைகள் ஒன்றையும் ஏற்க மாட்டார்.
-இரயிலில் இலவசமாகப் போக மாட்டார்.
-சம்பளம் எதுவும் வாங்க மாட்டார்.
-அரசு கொடுக்கும் சொகுசு பங்களாவில் தங்க மாட்டார்.
-கையைத் தலைக்கு வைத்து திண்ணையில் தூங்குவார்.
-வாழ்வில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர்.
-இவர் சிறையிலிருக்கும் காலத்தில் மாரடைப்பு வந்து இறந்தவர்கள், உணவுண்ணாமல் இறந்தவர்கள், இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்கள், மொட்டை இட்டவர்கள் ஏராளம்.
-ருசிக்கு அன்றி பசிக்கு உணவுண்பார்.
தவறாக ஊற்றப்பட்ட வேப்பெண்ணை சோற்றை முகம் சுழிக்காமல் உண்ட கதைகளும் உண்டு.
-சொத்துக்கள் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்டோருக்கு எழுதிக் கொடுத்தவர்.
-"சாதி வேறுபாடு பார்ப்பவன் சண்டாளன்" என்றார்.
-"தலித்துகள் மீது தாக்குதல் நடத்துபவன், என் நெஞ்சைப் பிழந்து ரத்தத்தைக் குடித்த பாவியாவான்" என்றார்.
-ஆங்கிலத்தை நாவிலே ஆண்டவர்.
டெல்லி நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரையை கேட்டு சில நேரம் ஸ்தம்பித்துப்போனது மன்றம்;
திகைத்துப் போயினர் உறுப்பினர்கள்;
தூக்கி வைத்துக் கொண்டாடின பத்திரிகைகள்.
அதுமட்டுமா?? மத நல்லிணக்கம் என்ற பெயருக்கு சொந்தக்காரர்..
தேவர், முஸ்லிம் உறவை உறக்கச் சொல்வோம் :
இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர்.
முஸ்லிம் பெருமக்களால் தேவர் மகன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட பால்குடித்தாயின் பாசம் மறவாத உ.முத்துராமலிங்க தேவர்
தேவர் பெருமகனார் தமது பொதுவாழ்வில் முஸ்லிம்கள் மீது பற்றும் பாசமும் மிகுந்த மரியாதையும் தந்து பழகினார்.
அதற்கு முக்கியக் காரணம் உண்டு.
தேவர் அய்யாவைப் பெற்றெடுத்த தாய் இறந்துவிடவே, கமுதியில் வாழ்ந்த ஆயிஷாபீவி அம்மாள் என்ற முஸ்லீம் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தார்.
அந்தப் பாச உணர்வால் அவர் மரணம் வரும்வரை அதை மறக்கவில்லை.
காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ஒரு வழக்கில் தேவரய்யா அவர்களை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
அந்தப் பிடிவாரண்டிலிருந்து தப்பிக்க தேவர் மகன் சில காலம் தலைமறைவாக வாழ்ந்தார்.
அந்தத் தருணத்தில்தான் அவருக்குப் பாலூட்டிய கமுதி. ஆயிஷாபீவி அம்மாள் இறந்துவிட்டார்.
ஆயிஷாபீவியை எப்படியும் தேவரய்யா பார்க்க வருவார் எனப் புலனாய்வுத் துறை போலிஸார்(சி.ஐ.டி.) கமுதியை முற்றுகையிட்டனர்.
அந்த இஸ்லாமிய அம்மையார் இறந்து வெகு நேரமாகிவிட்டது...
மத சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது..
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது...
ஆனாலும் யாரையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்....
அவ்வபோது காவல்துறை உளவு பிரிவினர் ஜமாத்தார்களிடமும் குடும்ப உறுப்பினர் களிடமும் ரகசியமாக ஏதோ கூறி செல்கிறார்கள்...
சரி என்று அவர்கள் தலையாட்டுவதும் தெரிகிறது...
நேரம் செல்ல செல்ல காவல் துறையினர் நேரிடையாகவே மிரட்டுகிறார்கள் அவர் வந்தவுடன் அஞ்சலி செலுத்த நீங்கள் அனுமதிக்க கூடாது...
எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் துறை மிரட்டுகிறது...
சரி அப்படியே செய்கிறோம் என்று ஜமாத்தார்கள் சொல்கிறார்கள்...
இதற்கிடையே ஒரு வில்லு வண்டி வந்து நிற்கிறது..
நீண்ட ஜிப்பா அடர்ந்த தாடி இஸ்லாமியர் போல தொப்பி அணிந்த ஒருவர் வண்டியில் இருந்து இறங்குகிறார்...
கண்களில் கண்ணீர் மெல்ல ஆயிஷா அம்மையாரின் சடலம் அருகே செல்கிறார்...
அந்த குடும்பமே அவரை தழுவி கைகளை பற்றி கொண்டு அஞ்சலி செலுத்த வந்த அவருக்கு ஆறுதல் சொல்கிறது...
அவரும் உடனடியாக வந்த வண்டியில் ஏறி விடை பெறுகிறார்...
உடனே ஜமாத்தார்கள் இறுதி ஊர்வலம் தொடங்க சொல்ல ...
ஊர்வலம் தொடங்குகிற நேரத்தில் காவல் துறை ஓடி வந்து கொஞ்சம் பொறுங்கள் எப்படியும் நாங்கள் எதிர் பார்க்கிற தேவர் அஞ்சலி செலுத்த வருவார் நாங்கள் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்...
இப்பொழுதுதானே வில் வண்டியில் வந்து தேவர் அஞ்சலி செலுத்திவிட்டு போகிறார் என்று சொல்ல...
ஏன் காவல் துறைக்கு தெரியபடுத்த வில்லை என்று மிரட்ட அந்த குடும்ப பெரியவர்கள் அமைதியாக சொன்னார்கள் ...
நம்பியவர்களை கைவிடாத குடும்பத்தில் உதித்த தேவருக்கு பாலூட்டி சிறு வயதில் வளர்த்தவர் ஆயிஸா அம்மையார்...
அந்த அம்மாவிற்கு அஞ்சலி செலுத்த எங்கள் வீட்டு மூத்த பிள்ளை தேவர் வந்து சென்றபோது நாங்கள் எப்படி எங்கள் பிள்ளையை காட்டி கொடுப்பது என்று சொல்ல காவல் துறை திரும்பி சென்றது...
தேவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது தமிழக முஸ்லிம்கள், நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக் கட்டளையிட்டார்..
தேவர், இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீவிரமாக எதிர்த்தார்..
தேவர், முஸ்லிம்களை வெறுத்தவர்களை வெறுத்தார்.
தேவர், முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்.
பிரிவினை மற்றும. வெறுப்பு பிரச்சாரத்தை வேரறுப்போம்.
மனித சமூகத்தின் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவோம்.
சரித்திர சாலை சந்திப்புகள்" என்ற நூலில் இருந்து.
-IRA
A great legend
ReplyDeleteHe is mega icon
ReplyDelete