Skip to main content

அக்டோபர் 16 - இன்று உலக உணவு நாள்.

அக்டோபர் 16 - இன்று உலக உணவு நாள்

உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” :- குர் ஆன்7:31



 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐ. நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.

 நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

வேடிக்கை என்னவென்றால் உலகமே உணவு நாளை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நாளில் ஒரு வேளை உணவுக்கு கூட வழி இன்றி உலகில் பல சிறார்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி இந்த உலகம் அக்கறை காட்டவில்லை என்பதே.

"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதி வாழ்ந்த  தமிழ் நாடு உள்ளிட்ட  பாரத நாட்டிலும் சரி இந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலை யுத்தத்துக்கு முகம் கொடுத்த ஈழ நாட்டிலும் சரி மற்றும் வல்லாதிக்க சக்திகளின் வன்கொடுமைகளுக்கு முகம் கொடுத்து பட்டினி சாவு எய்தும் உலக நாடுகளிலாகட்டும் சரி எத்தனை கோடி குழந்தைகள் உள்ளிட்ட மாந்தர்கள் பட்டினியால் நித்தம் நித்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எண்ணி பார்க்காமல் கடந்து போகின்றன உலக உணவு நாள் சம்பிரதாய நிகழ்வுகள்.

செல்வந்த நாடுகளில் ஆடம்பர வாழ்வு வாழ்வோரின் ஊதாரி களியாட்ட செலவுகளுக்கும்  குப்பை தொட்டிகளுக்கும் போகும் உண்ட உணவு தட்டில் எஞ்சி இருக்கும் உணவு போதும் இந்த உலகில் பட்டினி சாவை தடுத்து நிறுத்துவதற்கு..

 இந்த உலகில் செல்வம் இருப்பவர்களால் பொறுப்போடு நினைக்கப்பட்டிருந்தால் எத்தனையோ பேரின் பசி போக்கி இருக்கும் அவர்களின் பொருளற்ற "பொருள்".

ஒரு தட்டில் நாம் பசியாற உண்ணும் உணவிற்கு மேலதிகமாக இருக்கும் உணவு எல்லாம் இந்த உலகின் பசி துன்பம் களைய பகிரப்பட்ட வேண்டும் என்ற பொதுவுடைமை சிந்தனை மிகுந்தால் போதும் இந்த உலகில் உணவு இன்றி பட்டினியாலும் வறுமையாலும் செத்து மடியும் உயிர்களின் பிணி நீங்கிவிடும்.

உணர்வோமா?

நாம் உண்ணும் உணவில் ஒருபிடி உணவை உலகில் பசி மாந்தர் பசி வலி போக்க பகிர்ந்து உண்டு வாழ்வோம் என உறுதி எடுத்து செயலாற்றுவோம்!

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...