அக்டோபர் 16 - இன்று உலக உணவு நாள்.
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” :- குர் ஆன்7:31
1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐ. நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
வேடிக்கை என்னவென்றால் உலகமே உணவு நாளை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நாளில் ஒரு வேளை உணவுக்கு கூட வழி இன்றி உலகில் பல சிறார்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி இந்த உலகம் அக்கறை காட்டவில்லை என்பதே.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதி வாழ்ந்த தமிழ் நாடு உள்ளிட்ட பாரத நாட்டிலும் சரி இந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலை யுத்தத்துக்கு முகம் கொடுத்த ஈழ நாட்டிலும் சரி மற்றும் வல்லாதிக்க சக்திகளின் வன்கொடுமைகளுக்கு முகம் கொடுத்து பட்டினி சாவு எய்தும் உலக நாடுகளிலாகட்டும் சரி எத்தனை கோடி குழந்தைகள் உள்ளிட்ட மாந்தர்கள் பட்டினியால் நித்தம் நித்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எண்ணி பார்க்காமல் கடந்து போகின்றன உலக உணவு நாள் சம்பிரதாய நிகழ்வுகள்.
செல்வந்த நாடுகளில் ஆடம்பர வாழ்வு வாழ்வோரின் ஊதாரி களியாட்ட செலவுகளுக்கும் குப்பை தொட்டிகளுக்கும் போகும் உண்ட உணவு தட்டில் எஞ்சி இருக்கும் உணவு போதும் இந்த உலகில் பட்டினி சாவை தடுத்து நிறுத்துவதற்கு..
இந்த உலகில் செல்வம் இருப்பவர்களால் பொறுப்போடு நினைக்கப்பட்டிருந்தால் எத்தனையோ பேரின் பசி போக்கி இருக்கும் அவர்களின் பொருளற்ற "பொருள்".
ஒரு தட்டில் நாம் பசியாற உண்ணும் உணவிற்கு மேலதிகமாக இருக்கும் உணவு எல்லாம் இந்த உலகின் பசி துன்பம் களைய பகிரப்பட்ட வேண்டும் என்ற பொதுவுடைமை சிந்தனை மிகுந்தால் போதும் இந்த உலகில் உணவு இன்றி பட்டினியாலும் வறுமையாலும் செத்து மடியும் உயிர்களின் பிணி நீங்கிவிடும்.
உணர்வோமா?
நாம் உண்ணும் உணவில் ஒருபிடி உணவை உலகில் பசி மாந்தர் பசி வலி போக்க பகிர்ந்து உண்டு வாழ்வோம் என உறுதி எடுத்து செயலாற்றுவோம்!
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” :- குர் ஆன்7:31
1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐ. நா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது.
நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
வேடிக்கை என்னவென்றால் உலகமே உணவு நாளை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த நாளில் ஒரு வேளை உணவுக்கு கூட வழி இன்றி உலகில் பல சிறார்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றி இந்த உலகம் அக்கறை காட்டவில்லை என்பதே.
"தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம்" என்று பாடிய பாரதி வாழ்ந்த தமிழ் நாடு உள்ளிட்ட பாரத நாட்டிலும் சரி இந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலை யுத்தத்துக்கு முகம் கொடுத்த ஈழ நாட்டிலும் சரி மற்றும் வல்லாதிக்க சக்திகளின் வன்கொடுமைகளுக்கு முகம் கொடுத்து பட்டினி சாவு எய்தும் உலக நாடுகளிலாகட்டும் சரி எத்தனை கோடி குழந்தைகள் உள்ளிட்ட மாந்தர்கள் பட்டினியால் நித்தம் நித்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எண்ணி பார்க்காமல் கடந்து போகின்றன உலக உணவு நாள் சம்பிரதாய நிகழ்வுகள்.
செல்வந்த நாடுகளில் ஆடம்பர வாழ்வு வாழ்வோரின் ஊதாரி களியாட்ட செலவுகளுக்கும் குப்பை தொட்டிகளுக்கும் போகும் உண்ட உணவு தட்டில் எஞ்சி இருக்கும் உணவு போதும் இந்த உலகில் பட்டினி சாவை தடுத்து நிறுத்துவதற்கு..
இந்த உலகில் செல்வம் இருப்பவர்களால் பொறுப்போடு நினைக்கப்பட்டிருந்தால் எத்தனையோ பேரின் பசி போக்கி இருக்கும் அவர்களின் பொருளற்ற "பொருள்".
ஒரு தட்டில் நாம் பசியாற உண்ணும் உணவிற்கு மேலதிகமாக இருக்கும் உணவு எல்லாம் இந்த உலகின் பசி துன்பம் களைய பகிரப்பட்ட வேண்டும் என்ற பொதுவுடைமை சிந்தனை மிகுந்தால் போதும் இந்த உலகில் உணவு இன்றி பட்டினியாலும் வறுமையாலும் செத்து மடியும் உயிர்களின் பிணி நீங்கிவிடும்.
உணர்வோமா?
நாம் உண்ணும் உணவில் ஒருபிடி உணவை உலகில் பசி மாந்தர் பசி வலி போக்க பகிர்ந்து உண்டு வாழ்வோம் என உறுதி எடுத்து செயலாற்றுவோம்!

Comments
Post a Comment