Skip to main content

நீதிக்கு துணை நிற்போம்!! ( அநீதி தோற்கட்டும்! அறம் வெல்லட்டும்! )

ஆசிஃபி பிரியாணியை சூளும் சதிகள்!

1999ம் ஆண்டில் தள்ளு வண்டியில் தனது பிரியாணி வியாபாரத்தை ஆரம்பித்த ஆசிஃப் என்பவர் இன்று சென்னையில் அசைக்க முடியாத அளவிற்கு பிரியாணி தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்.



தரத்திற்கும்,சுவைக்கும் ஆசிஃப் கொடுத்த முக்கியத்துவம்தான் அவரை தொழிலில் இந்தளவிற்கு உயர்த்தியுள்ளது.மேலும் பல இடங்களில் ஆசிஃப் தனது கிளைகளை நிறுவியுள்ளார் என்பதும் சென்னை மக்கள் நன்கறிவார்கள்.

சமீபத்தில் இவரது கடைகளுக்கு சோதனை செய்த அரசாங்க அதிகாரிகள்..

உணவு சமைப்பவர் ஏன் ஷூ போடவில்லை?

விறகு கட்டைகளை கீழே போடக்கூடாது!

தண்ணீர் வரும் அந்த குழாய் ஏன் பழுமடைந்துள்ளது?

போன்ற உப்பு சப்பில்லாத கேள்விகளை கேட்டு அவரது கடைக்கு சீல் போட்டுள்ளனர்.

இது நடந்த அன்றைய தினமே ஏதோ ஒரு பகுதியில் 2000 கிலோ வீணான இறைச்சிகள் கைப்பற்றிய செய்தியினை இதனோடு சேர்த்து விசக்கிருமிகள் சிலர் சமூக வளைதலங்களில் பரப்பி வந்தனர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்காளான அதன் உரிமையாளர் ஆசிஃப் உடனே மீடியாக்களை அழைத்து....

"என் தொழிலை அழிப்பதற்கான சதிகள் நடக்கிறது.இதற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை அறிய முடியவில்லை..பூண்டின் ஒரு பகுதி கருப்பானால்கூட அதை சமைக்க பயன்படுத்தாத என் மீது இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள்.



எந்த கேள்வியை யார் கேட்டாலும் அதற்கு பதிலளிக்க நான் தயார்.உணவு தயாரிப்பின் சுகாதார விசயத்தில் நூறு சதவிகிதம் சரியாகதான் செயல்பாடுகள் உள்ளது என்பதை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.

நானும்,எனது தொழிலும்,இதனை நம்பி வாழும் 1500 குடும்பங்களும் இப்போது ஸ்தம்பித்துபோய் நிற்கின்றோம்.இந்த சமயத்தில் மக்களாகிய நீங்கள் எங்களுக்கு துணையாக நில்லுங்கள்" என்ற இவரது கள்ளங்கபடமற்ற பேட்டி பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

அதனால் மக்களே! ஒரு சாமானியனின் வளர்ச்சியினை கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோதான் இதுபோன்ற கீழ்தரமான காரியங்களை செய்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

விசக்கிருமிகளால் பரப்பப்படும் பொய்யான செய்திகளை நம்பாமல் நாம் இந்த உண்மை செய்திகளை அறிந்து ஆசிஃப்க்கு ஆதரவாக துணை நிற்போம்!

அநீதி தோற்கட்டும்! அறம் வெல்லட்டும்!

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...