Skip to main content

அடித்தட்டு மக்கள் உண்ண உணவில்லாத நாட்டில் எதற்கு 3000 கோடியில் யாருக்கும் பயனில்லாத சிலை??

உலகிலேயே மிக நீலமான பாலத்தை சீனா இன்று திறக்க உள்ளது, அதே நேரம் உலகிலேயே மிக உயரமான பட்டேல் சிலையை இந்தியா (மோடி) அரசு  திறக்க உள்ளது, இதுதான் இந்தியாவை ஆளும் முட்டாள்களின் வளர்ச்சி..



சிலை திறப்பால் ஏழைகளின் வாழ்கை முன்னேறுமா எரிபொருள் விலை குறையுமா அல்லது விலைவாசி குறைந்ததா(?)

சிலை அரசியலும் முட்டாள் மக்களும்.

அரசியல் கட்சிகள் சிலை வைப்பதே ஓட்டிற்காக தான் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால்.

3000 கோடி செலவில் பட்டேல் சிலை வைக்க பட்டிருக்காது.

வள்ளுவருக்கோ,கண்ணகிக்கோ, காந்திக்கோ,பட்டேலுக்கோ சிலை வைப்பதினால்.

ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வந்து விட போகிறதா ? பெட்ரோல் விலை குறைய போகிறதா ?

சடலத்தை ஆம்பலன்சில் தூக்கி செல்ல முடியாமல் கையில் தூக்கி செல்லும் இந்த நாட்டில் தான் 3000 கோடிக்கு சிலை.

இதை நியாய படுத்துபவர்கள் அது அவர்களுக்கு செய்யும் மரியாதை, மற்றும் அவருடைய வரலாரை மக்கள் நினைவு கூறுவதற்கு என்பார்கள்.

மரியாதை என்பது சிலைகளில் இல்லை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இருக்கிறது.

அவர்களை போல வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது...

5 ரூபாய்க்கு வழி இல்லாமல் தவிக்கும் அடித்தட்டு மக்கள் பிச்சை எடுத்து வருகிறார்கள்..

3000 கோடியில் சிலை தேவைதானா.? என  கோட்டால் நாம் சமுகவிரோதிகளாம்

குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது.

இந்த பெரிய பட்டேல் சிலை அமைந்துள்ள இடத்தினால், விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.

ஆனால், அதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோதிக்கு கவலை இல்லை.

அவருக்கு தான் என்ற அகங்காரமே முக்கியம்.

அதுவே உலகின் உயரமான சிலையை அமைக்க வழிவகையாக இருந்தது.

சர்தார் பட்டேலின் உயர்ந்த நிலைக்கு சமமாக தன் பெயரையும் வைத்து, வரும் தலைமுறையினர் பட்டேலை குறிப்பிடும் போது இவரையும் குறிப்பிட வேண்டும் என்று மோதி நினைக்கிறார்.

அது ஒருபோதும் நிறைவேறாது பகல் கனவாகவே போகும் என்பதை விரைவில் உணர்வார்கள் இந்த அறிவுஜீவிகள்...

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...