Skip to main content

அடித்தட்டு மக்கள் உண்ண உணவில்லாத நாட்டில் எதற்கு 3000 கோடியில் யாருக்கும் பயனில்லாத சிலை??

உலகிலேயே மிக நீலமான பாலத்தை சீனா இன்று திறக்க உள்ளது, அதே நேரம் உலகிலேயே மிக உயரமான பட்டேல் சிலையை இந்தியா (மோடி) அரசு  திறக்க உள்ளது, இதுதான் இந்தியாவை ஆளும் முட்டாள்களின் வளர்ச்சி..



சிலை திறப்பால் ஏழைகளின் வாழ்கை முன்னேறுமா எரிபொருள் விலை குறையுமா அல்லது விலைவாசி குறைந்ததா(?)

சிலை அரசியலும் முட்டாள் மக்களும்.

அரசியல் கட்சிகள் சிலை வைப்பதே ஓட்டிற்காக தான் என்பதை மக்கள் உணர்ந்து விட்டால்.

3000 கோடி செலவில் பட்டேல் சிலை வைக்க பட்டிருக்காது.

வள்ளுவருக்கோ,கண்ணகிக்கோ, காந்திக்கோ,பட்டேலுக்கோ சிலை வைப்பதினால்.

ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வந்து விட போகிறதா ? பெட்ரோல் விலை குறைய போகிறதா ?

சடலத்தை ஆம்பலன்சில் தூக்கி செல்ல முடியாமல் கையில் தூக்கி செல்லும் இந்த நாட்டில் தான் 3000 கோடிக்கு சிலை.

இதை நியாய படுத்துபவர்கள் அது அவர்களுக்கு செய்யும் மரியாதை, மற்றும் அவருடைய வரலாரை மக்கள் நினைவு கூறுவதற்கு என்பார்கள்.

மரியாதை என்பது சிலைகளில் இல்லை, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இருக்கிறது.

அவர்களை போல வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது...

5 ரூபாய்க்கு வழி இல்லாமல் தவிக்கும் அடித்தட்டு மக்கள் பிச்சை எடுத்து வருகிறார்கள்..

3000 கோடியில் சிலை தேவைதானா.? என  கோட்டால் நாம் சமுகவிரோதிகளாம்

குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது.

இந்த பெரிய பட்டேல் சிலை அமைந்துள்ள இடத்தினால், விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.

ஆனால், அதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோதிக்கு கவலை இல்லை.

அவருக்கு தான் என்ற அகங்காரமே முக்கியம்.

அதுவே உலகின் உயரமான சிலையை அமைக்க வழிவகையாக இருந்தது.

சர்தார் பட்டேலின் உயர்ந்த நிலைக்கு சமமாக தன் பெயரையும் வைத்து, வரும் தலைமுறையினர் பட்டேலை குறிப்பிடும் போது இவரையும் குறிப்பிட வேண்டும் என்று மோதி நினைக்கிறார்.

அது ஒருபோதும் நிறைவேறாது பகல் கனவாகவே போகும் என்பதை விரைவில் உணர்வார்கள் இந்த அறிவுஜீவிகள்...

Comments