நீதிமன்றத்தில் கலவர புகழ் எச்ச.ராஜாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான எஸ்.துரைசாமி அவர்கள்..
நேற்று 22.10.2018 H.ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வருவதற்கு முன்னமேயே தனது படைபரிவாரங்களுடன் மற்றும் சுமார் 50 வக்கீல்களுடனும் 100 போலீசாரின் பாதுகாப்புடன் ராஜா வந்துள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி வழக்கில் ஆஜராக நீதிமன்றம் சென்ற நானும் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும் உள்ளே நுழையக்கூட முடியவில்லை.
தட்டுதடுமாறி உள்ளே நுழைந்தோம்.
உட்கார இடமில்லை. ஆனால் அங்கே எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. வக்கீல்கள் அமரும் நாற்காலியில் ராஜா. அங்கிருந்துதான் நாங்கள் வாதாடுவோம்.
ஒரு நீதிமன்ற அவமதிப்பாளி (contemnor) வக்கீல்கள் அமரும் பகுதியில் நிற்க வேண்டும் அல்லது பார்வையாளர் பகுதியில் இருக்க வேண்டும்.
வழக்கு கூப்பிடும் போது நீதிபதிகள் முன் தெரியும்படி கேட்கும் தூரத்தில் நிற்க வேண்டும். இதுதான் மரபு.
நீதிமன்றம் முழுவதும் ஓரே கூட்டம்.
நகரக்கூட இடமில்லை. எல்லா வக்கீல்களும் நிற்க வேண்டிய சூழ்நிலை.
அப்போது அங்கே மயான அமைதி.
எந்த வக்கீலும் ராஜாவிடம் சென்று அங்கே உட்காரக்கூடாது என்று அறிவுரை சொல்ல பயம்.
ஆனால் வக்கீல் துரைசாமி மிகவும் சத்தமாக யாரை யாரையெல்லாம் இங்கே உட்கார வைக்கவேண்டும் என்ற விவஸ்தையே கிடையாதா ? என்று சத்தம் போட்டது தான்.
அடுத்த கனம் நீதிமன்றமே ஆடிப்போய் விட்டது.
தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்த ராஜாவிற்கு பேரதிர்ச்சி.
பா.ஜ.க. வக்கீல்கள் முகத்தில் ஈயாடவில்லை.
உடனே நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜா எழுந்து நிற்க நீதிமன்றமே கலகலத்து போய்விட்டது.
எந்த நாற்காலியில் ராஜா உட்கார்ந்திருந்தாரோ அதே நாற்காலியில் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் அமர்ந்து நீதிமன்ற மாண்பையை நிலைநாட்டினார்.
வழக்காட எதிர்பார்த்த எங்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி ராஜா கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பு.
ஏற்கெனவே செத்து அவமானப்பட்டு மன்னிப்பு கேட்ட பாம்பை இன்னொருமுறை அடிக்க எங்களுக்கு மனமில்லை.
தகவல் :- சங்கிலி பூதத்தான் அல்வாசிட்டி
மற்றும்
வழக்கறிஞர் V.இளங்கோவன்
தலைமை நிலையச் செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
நேற்று 22.10.2018 H.ராஜா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வருவதற்கு முன்னமேயே தனது படைபரிவாரங்களுடன் மற்றும் சுமார் 50 வக்கீல்களுடனும் 100 போலீசாரின் பாதுகாப்புடன் ராஜா வந்துள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி வழக்கில் ஆஜராக நீதிமன்றம் சென்ற நானும் மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமியும் உள்ளே நுழையக்கூட முடியவில்லை.
தட்டுதடுமாறி உள்ளே நுழைந்தோம்.
உட்கார இடமில்லை. ஆனால் அங்கே எங்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. வக்கீல்கள் அமரும் நாற்காலியில் ராஜா. அங்கிருந்துதான் நாங்கள் வாதாடுவோம்.
ஒரு நீதிமன்ற அவமதிப்பாளி (contemnor) வக்கீல்கள் அமரும் பகுதியில் நிற்க வேண்டும் அல்லது பார்வையாளர் பகுதியில் இருக்க வேண்டும்.
வழக்கு கூப்பிடும் போது நீதிபதிகள் முன் தெரியும்படி கேட்கும் தூரத்தில் நிற்க வேண்டும். இதுதான் மரபு.
நீதிமன்றம் முழுவதும் ஓரே கூட்டம்.
நகரக்கூட இடமில்லை. எல்லா வக்கீல்களும் நிற்க வேண்டிய சூழ்நிலை.
அப்போது அங்கே மயான அமைதி.
எந்த வக்கீலும் ராஜாவிடம் சென்று அங்கே உட்காரக்கூடாது என்று அறிவுரை சொல்ல பயம்.
ஆனால் வக்கீல் துரைசாமி மிகவும் சத்தமாக யாரை யாரையெல்லாம் இங்கே உட்கார வைக்கவேண்டும் என்ற விவஸ்தையே கிடையாதா ? என்று சத்தம் போட்டது தான்.
அடுத்த கனம் நீதிமன்றமே ஆடிப்போய் விட்டது.
தன்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைத்த ராஜாவிற்கு பேரதிர்ச்சி.
பா.ஜ.க. வக்கீல்கள் முகத்தில் ஈயாடவில்லை.
உடனே நாற்காலியில் அமர்ந்திருந்த ராஜா எழுந்து நிற்க நீதிமன்றமே கலகலத்து போய்விட்டது.
எந்த நாற்காலியில் ராஜா உட்கார்ந்திருந்தாரோ அதே நாற்காலியில் வழக்கறிஞர் துரைசாமி அவர்கள் அமர்ந்து நீதிமன்ற மாண்பையை நிலைநாட்டினார்.
வழக்காட எதிர்பார்த்த எங்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி ராஜா கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பு.
ஏற்கெனவே செத்து அவமானப்பட்டு மன்னிப்பு கேட்ட பாம்பை இன்னொருமுறை அடிக்க எங்களுக்கு மனமில்லை.
தகவல் :- சங்கிலி பூதத்தான் அல்வாசிட்டி
மற்றும்
வழக்கறிஞர் V.இளங்கோவன்
தலைமை நிலையச் செயலாளர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments
Post a Comment