துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகள்
இனிமுதல் பாஸ்போர்ட் இன்றி சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்க முடியும்......
துபாய் பல்வேறு அதிநவீன வசதிகளை அனைத்து துறைகளிலும் தொடர்ந்து அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம்
இதன் இன்னோரு புதிய வசதியாக துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இன்றி ஸ்மார்ட் டனல் வழியாக சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்கலாம் என்ற புதிய வசதியை நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் ஆரம்பகட்ட சோதனை அடிப்படையில் முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு ஸ்மார்ட் டனல் எனும் தானியங்கி இமிக்கிரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு இது விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் டனல் வழியாக வரும் உங்களுடைய முகத்தை ஆட்டோமெட்டிக்காக ஸ்கேன் செய்தே இமிக்கிரேசன் காரியங்களை முடித்துக் கொள்ளலாம், இதற்காக உங்களுடைய பாஸ்போர்ட், அடையாள அட்டை, போர்டிங் கார்டு போன்ற எதுவும் தேவையில்லை. இந்த ஸ்மார்ட் டனல் இமிக்கிரேசன் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒரு சில நொடிகள் மட்டுமே.
ஸ்மார்ட் டனல் எவ்வாறு செயல்படுகிறது:
1. ஏற்கனவே ஸ்மார்ட் கேட் முறையை பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட் டனல் முறையை உபயோகிக்கலாம்.
2. ஸ்மார்ட் கேட் உபயோகிப்பாளர்களின் தனிநபர் விபரங்கள் ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவாகியிருப்பதால் ஸ்மார்ட் டனலுக்காக மீண்டும் பதிய வேண்டியதில்லை.
3. ஸ்மார்ட் கேட்டுக்காக முன்பதிவு செய்திடாதவர்கள் ஏர்போர்ட்டில் இதற்கென உள்ள 2 தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இமிக்கிரேசன் கவுண்டருக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
4. முதன்முதலாக ஸ்மார்ட் டனலை பயன்படுத்தும் பயணிகள் ஒருமுறை இமிக்கிரேசன் கவுண்டரில் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொண்டு செல்ல வேண்டும் மறுமுறை என இனி எப்போதும் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொள்ள தேவையில்லை.
5. அதேபோல் பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட் குறைந்தது
6 மாதமாவது செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் உங்களுடைய பயணம் வேறு நாடுகளுக்கு தொடரும் நேரத்தில் திருப்பியனுப்பப்பட வாய்ப்புள்ளது.
இனிமுதல் பாஸ்போர்ட் இன்றி சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்க முடியும்......
துபாய் பல்வேறு அதிநவீன வசதிகளை அனைத்து துறைகளிலும் தொடர்ந்து அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம்
இதன் இன்னோரு புதிய வசதியாக துபாய் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இன்றி ஸ்மார்ட் டனல் வழியாக சில நொடிகளில் இமிக்கிரேசன் கடமைகளை முடிக்கலாம் என்ற புதிய வசதியை நேற்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-ல் ஆரம்பகட்ட சோதனை அடிப்படையில் முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு ஸ்மார்ட் டனல் எனும் தானியங்கி இமிக்கிரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு இது விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் டனல் வழியாக வரும் உங்களுடைய முகத்தை ஆட்டோமெட்டிக்காக ஸ்கேன் செய்தே இமிக்கிரேசன் காரியங்களை முடித்துக் கொள்ளலாம், இதற்காக உங்களுடைய பாஸ்போர்ட், அடையாள அட்டை, போர்டிங் கார்டு போன்ற எதுவும் தேவையில்லை. இந்த ஸ்மார்ட் டனல் இமிக்கிரேசன் பணிகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒரு சில நொடிகள் மட்டுமே.
ஸ்மார்ட் டனல் எவ்வாறு செயல்படுகிறது:
1. ஏற்கனவே ஸ்மார்ட் கேட் முறையை பயன்படுத்தியவர்கள் தொடர்ந்து ஸ்மார்ட் டனல் முறையை உபயோகிக்கலாம்.
2. ஸ்மார்ட் கேட் உபயோகிப்பாளர்களின் தனிநபர் விபரங்கள் ஏற்கனவே கம்ப்யூட்டரில் பதிவாகியிருப்பதால் ஸ்மார்ட் டனலுக்காக மீண்டும் பதிய வேண்டியதில்லை.
3. ஸ்மார்ட் கேட்டுக்காக முன்பதிவு செய்திடாதவர்கள் ஏர்போர்ட்டில் இதற்கென உள்ள 2 தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இமிக்கிரேசன் கவுண்டருக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
4. முதன்முதலாக ஸ்மார்ட் டனலை பயன்படுத்தும் பயணிகள் ஒருமுறை இமிக்கிரேசன் கவுண்டரில் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொண்டு செல்ல வேண்டும் மறுமுறை என இனி எப்போதும் பாஸ்போர்ட்டை பரிசோதித்துக் கொள்ள தேவையில்லை.
5. அதேபோல் பயணிகள் தங்களுடைய பாஸ்போர்ட் குறைந்தது
6 மாதமாவது செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் உங்களுடைய பயணம் வேறு நாடுகளுக்கு தொடரும் நேரத்தில் திருப்பியனுப்பப்பட வாய்ப்புள்ளது.

Comments
Post a Comment