Skip to main content

ஆன்லைன் பட்டாப் பதிவு

பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. 



http://www.tn.gov.in/

பட்டா கிராமப் புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. 2008-ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கிராமப் புறச் சொத்துக்களுக்கும் கணினி மூலம் பட்டா வழங்கப்படுகிறது. அதில் தாசில்தார், துணை தாசில்தார், அல்லது மண்டலத் துணை தாசில்தார் கையெழுத்து இடம் பெறும்.

கணினி பட்டா என்பது மாநகராட்சி, நகராட்சி, நத்தம் நிலம் அல்லாத இடங்களுக்கு வழங்கப்படும். மேலும் அதில் கிராமம், தாலுகா கணக்கெடுப்பு எண்கள் குறிப்பிடப்பட வேண்டும். உட்பிரிவு எண்கள் நன்செய் நிலம், புன்செய் நிலம் அளவு மற்றும் பிற நில அளவுகளும் அட்டவனையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கணினி மயமாக்கப்பட்ட பட்டா பெறுவது எப்படி?

2008-ம் ஆண்டு முதல் நிலப் பதிவுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ள 3-வது மாநிலம் தமிழகம் (கர்நாடகம், ஆந்திர பிரதேசம் முறையே முதல் இரு இடங்களில் உள்ள மாநிலங்கள்). கணினி மயமாக்கப்பட்ட பட்டாவில் சொத்தின் வரைபடம் இடம்பெறாது.

மேலும் 2011-ம் ஆண்டு முதல் தமிழக அரசாங்கம் நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன்படி பட்டா விண்ணப்பதாரர் நேரடியாகக் கிராம நிர்வாக அலுவலகரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துக் கிராம நிர்வாக அதிகாரியிடம் ரசீது பெறலாம்.

ஒருவேளை அந்தப் பட்டா உட்பிரிவுகளில் தொடர்புடையது இல்லையென்றால் விண்ணப்பதாரர் நேரடியாகச் சரிபார்த்து அசல் ஆவணங்களுடன் தாலுகா அலுவலகம் சென்று பட்டா பெறலாம்.

ஒருவேளை உட்பிரிவுகளில் தொடர்புடையதாக இருந்தால் விண்ணப்பதாரர் விண்ணப்பம் பதிவுசெய்ததில் இருந்து நான்காவது வெள்ளிக்கிழமை பெற்றுக்கொள்ளலாம் (சர்வேயர் இடத்தைப் பார்வையிட்டப் பிறகு).

விண்ணப்பதாரர் உட்பிரிவுகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைத் தாசில்தாரிடமிருந்த ஒப்புதல் பெற்ற அன்றே செலுத்த வேண்டும். உட்பிரிவு நடைமுறைகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்படவேண்டும்.

பட்டா ஆன்லைனில் சரிபார்க்கும் முறை

பட்டா ஆன்லைனில் சரிபார்க்க >www.tn.gov.in என்ற இணையதளத்தில் இ-சேவைகள் பரிவு மாவட்ட அலுவலகங்கள் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பட்டா அல்லது சிட்டா ஆகியவற்றில் குறிப்பிடப்பட வேண்டிய விவரங்களான மாவட்டம், தாலுகா, கிராமம் மற்றும் பட்டா எண் ஆகியவற்றைக் காணலாம். ஒருவேளை பட்டா எண் தெரியவில்லை என்றால் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். சர்வே எண் (ஏதாவது ஒரு சர்வே எண் போதுமானது) உடன் உட்பிரிவுகளும் நிரப்பப்பட வேண்டும்.

சென்னை சொத்துகள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் முறை:

சமீபத்தில் சென்னையிலுள்ள அனைத்துச் சொத்து விவரங்களையும் மேற்படி இணையதளத்தில் ஆன்லைன் மூலம் சரி பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு சான்றுகள் கிளிக் செய்ய வேண்டும். பிறகு தாலுகாவைத் தேர்வு செய்ய வேண்டும். பிளாக் நம்பர் மற்றும் தெருவைக் குறிப்பிட வேண்டும். பின்னர் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்களைக் குறிப்பிட வேண்டும். பின்னர் தேடுதலை கிளிக் செய்ய வேண்டும். சொத்தின் முகவரி, சர்வே எண், உட்பிரிவு எண், சொத்தின் அளவு, உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...