Skip to main content

அவல நிலையில் அரசு பள்ளி

அவல நிலையில் அரசு பள்ளி! 

கேள்விக்குறி யாகும் மாணவர்களின் நிலை?? 

அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்கள்...


இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி.

தமிழகம் மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர்.

அனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் குறைந்து வருவது தான் அதிர்ச்சியூட்டும் விஷயம்.

L .K.G படிப்புக்கு கூட மாதத்திற்கு ஆயிரகணக்கில் கறக்கும் பள்ளிகளை தேடி செல்லும் அளவுக்கு நமது கிராம மக்களின் பொருளாதார நிலை ஒன்றும் உயர்ந்து விடவில்லை.

ஆனாலும் விண்ணப்பம் வாங்குவதற்கே விடிய,விடிய பள்ளி வாயில்களில் காத்திருக்கும் நிலையை காணமுடிகிறது.

 குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தரமான கல்வியை தரவேண்டும் என்ற கட்டாயத்தின் வெளிப்பாடு தான் இது என்பதின் ஐயமில்லை.

ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டும் சேர்க்கை உயர்ந்து விடபோவதில்லை பிரச்சனையே குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்து பெற்றொருக்கு உள்ள அச்சமும், அரசு பள்ளிகள் மிதான அவ நம்பிக்கையும்தான்.

அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை.

ஏன் என்றால் சுகாதாரமற்ற நிலை?

இது போன்ற சூழலில் கிராமப்புற சாதாரண மக்கள் மட்டும் அரசு பள்ளிகளை நாடி வரவேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது.

ஏன் இந்த நிலை???

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக சுகாதாரத்தை சுட்டி காட்டுகிறார்கள் பொதுமக்கள்..

ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது அரசு??

கல்வியில் ஏன் இந்த அலட்சியம்??

அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் 80 விழுக்காடு ஏழை எளிய மக்கள் என்பதாலா???

சுகாதாரமற்ற முகம்சுழிக்கும் அவல நிலை

பல அரசு பள்ளிகளின் நிலையும் இதுதான் அதில் ஒன்று இதோ,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நிலையை நீங்களே பாருங்கள்...

1. பள்ளியை சுற்றி கருவேல மரங்கள்..

2. குப்பை மேடாகும் பள்ளி வளாகம்..

3. பழுது பார்க்காத கட்டிடங்கள்..

4. பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,

5. காய்ந்த சருகுகள்,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள்,

6.பராமரிக்கப்படாத மாணவர்கள் கழிப்பறைகள்....

7. பார்த்தாலே அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் சமையல் அறை..

இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள்.

என்று மாறும் இந்த நிலை..

இந்த நிலையில் இருந்து எப்போது கிடைக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுதந்திரம்...

இந்நிலை நீடித்தால் நமது கிராமத்தின் அரசு பள்ளி எதிர்காலத்தில் தொடர்ந்து இயங்குவது கேள்விக்குறியே?

மாணவர் இல்லா பள்ளியில் ஆசிரியருக்கு என்ன வேலை?

ஆசிரியர் இல்லா பள்ளியில் சங்கங்களுக்கு என்ன வேலை?

ஊதிய முரண்பாடுகள்,பணிச்சுமை போன்ற வழக்கமான கோரிக்கைகளைத்தாண்டி ஆசிரியர்கள் போராட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் பல நம்முன்னே உள்ளன.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் நினைத்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.

இது நாளைய நம் சந்ததிக்கானது ...

இந்த பயணம் கடினமானது என்றாலும் இலக்கு ஒன்றே வெற்றி ...

ஒற்றுமையோடு பயனிப்போம் ...

மக்கள் அனைவரும் மகன் / மகளின் எதிர்கால கல்வியை கருத்தில்கொண்டு தனியார் பள்ளிகளை தேடி செல்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை..

இந்த நிலையை  மாற்றி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களில் ஒருவனாக எங்களுக்கு கோரிக்கை..

இந்த  அசுத்தமான நிலையில் இருக்கும் அரசு பள்ளிகள்  நிலை மாற அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை முன் வரவேண்டும் என்பதற்காக இந்த பதிவு......

-IRA

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...