Skip to main content

மோடியின் திட்டங்களும் / மக்கள் படும் துன்பங்களும்

அதிகரிக்கும் குடும்பச் செலவினங்கள் வாழ்க்கை மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள்…!

காரணம் மோடி திட்டங்கள் 

அதிகரிக்கும் குடும்பச் செலவுகளால், அன்றாட வாழ்க்கையை நடத்துவது குறித்த நம்பிக்கையை இந்தியர்கள் இழந்து கொண்டிருப்பதாக ‘இப்சோஸ் பப்ளிக் அபயர்ஸ்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்த நிறுவனமானது ‘இந்தியன் பிரைமரி கன்ஸ்யூமர் செண்டிமெண்ட் இண்டெக்ஸ்’ என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்திய நிலையில், அதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

இப்சோஸ் நிறுவனம் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5 வரையில், ஆன்லைன் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



அதில், “உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பங்குச் சந்தை வீழ்ச்சி, சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர், பெரிய வங்கிகளின் வாராக் கடன் சுமை இவை எல்லாமே வாடிக்கையாளர்களைப் பாதிக்கின்றன; குறிப்பாகத் தனிநபர் நிதி நிலைகளைப் பாதித்துள்ளன; இதனால் சேமிப்புகள், முதலீடுகள், தனிப்பட்ட நிதி மற்றும் வீட்டுச் செலவுகள் குறித்த நுகர்வோரின் நம்பிக்கை சரிந்து வருகின்றன” என்பது தெரியவந்துள்ளது.



“குடும்பச் செலவுகளில் உள்ள பல்வேறு காரணிகளால் நுகர்வோர் நம்பிக்கை செப்டம்பர் மாதத்தில் 6.6 சதவிகிதம் சரிந்துள்ளது; வேலைவாய்ப்புகள் குறித்த கவலையும், பொருளாதாரச் செயல்பாடுகளும் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளன” என்று கூறும் இந்த ஆய்வு, “வேலைவாய்ப்பு நம்பிக்கை குறித்த துணைக் குறியீடுகள் 4.3 புள்ளிகளும், பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கான துணைக் குறியீடுகள் 3.9 புள்ளிகளும், முதலீட்டுச் சூழலுக்கான துணைக் குறியீடுகள் 8.8 புள்ளிகளும், தற்போதைய தனிப்பட்ட நிதி நிலைகள் 8.9 புள்ளிகளும் சரிந்துள்ளன” என்று புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...