அதிகரிக்கும் குடும்பச் செலவினங்கள் வாழ்க்கை மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள்…!
காரணம் மோடி திட்டங்கள்
அதிகரிக்கும் குடும்பச் செலவுகளால், அன்றாட வாழ்க்கையை நடத்துவது குறித்த நம்பிக்கையை இந்தியர்கள் இழந்து கொண்டிருப்பதாக ‘இப்சோஸ் பப்ளிக் அபயர்ஸ்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனமானது ‘இந்தியன் பிரைமரி கன்ஸ்யூமர் செண்டிமெண்ட் இண்டெக்ஸ்’ என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்திய நிலையில், அதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
இப்சோஸ் நிறுவனம் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5 வரையில், ஆன்லைன் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், “உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பங்குச் சந்தை வீழ்ச்சி, சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர், பெரிய வங்கிகளின் வாராக் கடன் சுமை இவை எல்லாமே வாடிக்கையாளர்களைப் பாதிக்கின்றன; குறிப்பாகத் தனிநபர் நிதி நிலைகளைப் பாதித்துள்ளன; இதனால் சேமிப்புகள், முதலீடுகள், தனிப்பட்ட நிதி மற்றும் வீட்டுச் செலவுகள் குறித்த நுகர்வோரின் நம்பிக்கை சரிந்து வருகின்றன” என்பது தெரியவந்துள்ளது.
“குடும்பச் செலவுகளில் உள்ள பல்வேறு காரணிகளால் நுகர்வோர் நம்பிக்கை செப்டம்பர் மாதத்தில் 6.6 சதவிகிதம் சரிந்துள்ளது; வேலைவாய்ப்புகள் குறித்த கவலையும், பொருளாதாரச் செயல்பாடுகளும் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளன” என்று கூறும் இந்த ஆய்வு, “வேலைவாய்ப்பு நம்பிக்கை குறித்த துணைக் குறியீடுகள் 4.3 புள்ளிகளும், பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கான துணைக் குறியீடுகள் 3.9 புள்ளிகளும், முதலீட்டுச் சூழலுக்கான துணைக் குறியீடுகள் 8.8 புள்ளிகளும், தற்போதைய தனிப்பட்ட நிதி நிலைகள் 8.9 புள்ளிகளும் சரிந்துள்ளன” என்று புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
காரணம் மோடி திட்டங்கள்
அதிகரிக்கும் குடும்பச் செலவுகளால், அன்றாட வாழ்க்கையை நடத்துவது குறித்த நம்பிக்கையை இந்தியர்கள் இழந்து கொண்டிருப்பதாக ‘இப்சோஸ் பப்ளிக் அபயர்ஸ்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனமானது ‘இந்தியன் பிரைமரி கன்ஸ்யூமர் செண்டிமெண்ட் இண்டெக்ஸ்’ என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்திய நிலையில், அதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
இப்சோஸ் நிறுவனம் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 5 வரையில், ஆன்லைன் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், “உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பங்குச் சந்தை வீழ்ச்சி, சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர், பெரிய வங்கிகளின் வாராக் கடன் சுமை இவை எல்லாமே வாடிக்கையாளர்களைப் பாதிக்கின்றன; குறிப்பாகத் தனிநபர் நிதி நிலைகளைப் பாதித்துள்ளன; இதனால் சேமிப்புகள், முதலீடுகள், தனிப்பட்ட நிதி மற்றும் வீட்டுச் செலவுகள் குறித்த நுகர்வோரின் நம்பிக்கை சரிந்து வருகின்றன” என்பது தெரியவந்துள்ளது.
“குடும்பச் செலவுகளில் உள்ள பல்வேறு காரணிகளால் நுகர்வோர் நம்பிக்கை செப்டம்பர் மாதத்தில் 6.6 சதவிகிதம் சரிந்துள்ளது; வேலைவாய்ப்புகள் குறித்த கவலையும், பொருளாதாரச் செயல்பாடுகளும் இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளன” என்று கூறும் இந்த ஆய்வு, “வேலைவாய்ப்பு நம்பிக்கை குறித்த துணைக் குறியீடுகள் 4.3 புள்ளிகளும், பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கான துணைக் குறியீடுகள் 3.9 புள்ளிகளும், முதலீட்டுச் சூழலுக்கான துணைக் குறியீடுகள் 8.8 புள்ளிகளும், தற்போதைய தனிப்பட்ட நிதி நிலைகள் 8.9 புள்ளிகளும் சரிந்துள்ளன” என்று புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.



Comments
Post a Comment