Skip to main content

பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள் தெரியுமா?

பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள்



அரசு ஊழியர் : 

பதிவு ஏடுகளில் திருத்தல், சேர்த்தல் போன்ற மோசடிகள் செய்யும் அரசு ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் - இந்திய தண்டனை சட்ட பிரிவு 167 - (ஏழு ஆண்டுகள் வரை - பதிவு சட்டம் பிரிவு 81)

பொதுமக்கள் :

பதிவின் பொது பதிவாளர் முன் பொய் வாக்கு மூலம் கொடுத்தல், போலி தகவலை எழுதுதல், போலி ஆவணம் வரைபடம் தாக்கல் செய்தல், ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். (இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191,192,193,419,467,471 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82)

ஆள் மாறாட்டம்

தன்னை பத்திர பதிவு செய்தவர் என்று கூறி நடித்து பத்திரத்தை திரும்ப வாங்கி செல்வதும் ஆள் மாறாட்ட குற்றம்தான் –
(பேரரசர் எதிர் கௌசல்யா, 5. பாம்பே எல். ஆர் 138 )
சாட்சி உடந்தை –
வேறு ஒருவராக பதிவு அலுவலகத்தில் நடிப்பவரை உண்மையானவர் என அடையாளம் காட்டும் சாட்சியும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனைக்குரியவர்.

(நீலகாந்தாராவ் சந்தாப்புல் எதிர் பேரரசர் – ஏ ஐ ஆர் 1922 – நாக்பூர் 86)
நல்ல உள்நோக்கம் இருந்தாலும் குற்றம், குற்றமே !
நல்ல உள்நோக்கத்துடன் ஒருவர் வேறு ஒருவர் போல் நடித்தாலும், அது குற்றம்தான். பிரிவு 82 இன் கீழ் தண்டிக்கப்பட கெட்ட உள்நோக்கம் (motive) அவசியமில்லை. ஆள்மாறாட்டம் மட்டுமே போதுமானது –
(அரசி எதிர் லூத்திபேவா, 2 பெங்கால் எல் ஆர் 25 கிரிமினல் )

சகோதரி வேடம் :

ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். முதாலமவர் சொத்தினை அபகரிக்க மற்ற இருவரும் விற்பனை ஆவணம் தயாரித்தனர். அதில் ஒருவர் முதலாமவர் போல் நடித்து ஆவணம் பதிவு செய்யப்பட்டது. இந்த இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது
(கங்கா திவ்யா எதிர் பேரரசர், ஏ ஐ ஆர் 1943 பாட்னா 227 @ பக்கம் 229)
கொடிது கொடிது உடந்தை கொடிது :
பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் அவரை ஏவி விட்டவரை விட கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – (அரசி எதிர் பிரசாத் ஜெயின் 8 W.R. (Cr) 16)
போலிகள் உருவாக்கத்துக்கு ஆயுள் தண்டனை -
பண மதிப்புள்ள படிவ வடிவிலான அவ்வனங்களுக்கும் உயில்கள், தத்து அதிகார ஆவணங்கள் ஆகியவற்றுக்கும் நேரடி போலி ஆவணங்கள் அல்லது மின்னணு வடிவ போலி ஆவணங்கள் தயாரிப்பவர்களுக்கு பத்தாண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை வரை சாதாரண, கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் – இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000)

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...