Skip to main content

ஒரு காணொளியை முழுமையாக பார்க்காமல் அதற்கு கருத்து கூறுவது யாருடைய செயல்??

தோசை..!
***********
தோசையிலும் சாதி உண்டு என அடித்துப் பேசியிருக்கின்றார் தோழர் மதிமாறன். 

https://m.youtube.com/watch?feature=share&v=lKTVzj4uA7w

தோசையில் மட்டுமா சாதி இருக்கின்றது? தோசை மாவு அரைப்பதற்கான மிஷினிலும் சாதி இருக்கின்றது. எங்க ஊரில் இடைநிலை சாதியினருக்கு ஒரு மிஷினிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தாருக்கு ஒரு மிஷினிலும் மாவு அரைத்துத் தரப்படுகின்றது என்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

தேநீர் குவளைகளில் கூட சாதி பார்க்கின்ற சமூகத்தில் தோசையில் மட்டும் சாதி இருக்காதா, என்ன? சாதியும் சாதிய உணர்வும் இரத்த நாளங்களில் கலந்துவிட்டிருக்கின்ற சமூகச் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் நாம் என்பதுதான் உண்மை.

அந்தத் தோசை உரையில் தோழர் மதிமாறன் பகிர்ந்துகொண்ட சில உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையே.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் மேல்சாதியைச் சேர்ந்தவரால் விருந்துக்கு அழைக்கப்படுகின்ற போது அவர் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளாகின்றார் என்பதை அழகாக விவரித்திருக்கின்றார் மதிமாறன்.

‘நீங்க எந்தச் சாதி?’ என எவராவது கேட்டு விடுவாரோ என்கிற பயமும் தயக்கமும் அந்த விருந்தாளியின் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கும்.

அமர்வில் இருக்கின்ற போது, உணவு அருந்திக் கொண்டிருக்கின்ற போது, தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கின்ற போது, சிரித்துப்  பேசிக் கொண்டிருக்கின்ற போது, சகஜமாக உரையாடிக் கொண்டிருக்கின்ற போது ‘அந்தக் கேள்வி வந்துவிடுமோ?’ என்கிற பயமும் அய்யமும் அவருடைய மனத்தைத் துளைத்துக்கொண்டே இருக்கும் என்கிறார் மதிமாறன்.

அடுத்து இன்னொன்றையும் மதிமாறன் குறிப்பிட்டுள்ளார். இந்த மன உளைச்சலும் பயமும் தயக்கமும் இஸ்லாமியர்களின் விருந்துகளில் கலந்துகொள்கின்ற போது வருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த நுட்பமான, அழகான, கனமான வித்தியாசத்தை போகின்ற போக்கில் தோழர் மதிமாறன் சுட்டிக்காட்டியிருக்க, முகநூல் போராளிகளோ ‘தோசையிலேயே’ முடங்கிவிட்டார்கள்.

டெய்ல் பீஸ் : தோசைக்கு எது சரியான காம்பினேஷன், தெரியுமா?

(1) மட்டன் குழம்பு (2) சிக்கன் குழம்பு (3) பீஃப் ஃபிரை (4) பேஜா பெப்பர் ஃபிரை (5) ஆஃப் பாயில் பெப்பர் (6) மட்டன்-வெண்டைக்காய் குழம்பு (7) மட்டன்-பீட்ரூட் குழம்பு (8) மட்டன் பெப்பர் ஃபால்(சுக்கா) (9) டபுள் ஆம்லெட் (10) பத்தாவதை நீங்களே சொல்லுங்கள்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...