Skip to main content

ஊடகங்களே! நாட்டில் பல ஊழல், ஆதிக்கம் செலுத்தும் வகையில் பல நடந்துகொண்டு இருக்கிறது அதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்..

தொப்பியை பூட்ஸ் மீது வைத்த காவலர் 

https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/27113714/1013147/Police-kept-his-Police-cap-on-Boots-Viral-Video.vpf

அவர் தொப்பியை எங்கே வைத்து இருக்கிறார் என்று குற்றம் சொல்லும் நாம் முதலில் இந்த அரசாங்கம் அவர்களை எப்படி வைத்து இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



 காவல்துறையினர் லஞ்சம் வாங்குகிறார்கள், அதிகாரதுஸ்புரயோகம் செய்கிறார்கள் என்று ஆயிரம் குற்றச்சாட்டுகள் சொன்னாலும் அவர்கள் உண்மையில் அந்த செருப்பை விட மோசமாக நடத்த படுகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் உள்ள காவல் அதிகாரி ஒன்றும் A/C அறையில் கால் ஆட்டி கொண்டு அமர்ந்து இருக்கவில்லை.

 பாவம் அவர் 8 மணிநேரம் வேலை வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்று கொடுக்காமல் இவர்களை கசக்கி பிழியும் இந்த அரசுகள்தான் குற்றவாளிகள் .

மக்களை காக்கும் காவலர்களை நல்ல முறையில் நடத்துவது அரசின் கடமை.

ஏன் காலையும் காலில் போடும் செருப்பை கேவலமாக பார்க்கிறீர்கள் காலில்லாமல் தங்களால் ஒரு அடி நகர முடியுமா??

நம் உடம்பில் உள்ள அத்தனை உறுப்புகளையும் தாங்கி நிற்பது கால்தானே காலும் காலில் போடும் செருப்பும் மதிக்கபட வேண்டியவை என்பது எங்களுடைய கருத்து..

காவலர்கள் தொப்பியை ஷுவின் மேல் வைத்தது தவறு இல்லை..

நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது
அதை கவனியுங்கள் நாட்டு மக்களுக்காக இரவு பகல் ஓய்வின்றி பணி செய்யும் இவர்களிடம் குறை கண்டுபிடிப்பதை தவிருங்கள்..

இதை அவர் வேண்டுமென்றே செய்தது போல் தெரியில்லை!குற்றம் காண்பது எளிது!கவனக்குறைவு என்று எடுத்து கொள்ளலாம்!

- IRA

Comments