Skip to main content

இறந்து போன ஒரு தொழிலாளியின் இழப்பீட்டுத் தொகை

இறந்து போன ஒரு தொழிலாளியின் இழப்பீட்டுத் தொகையை பெற சட்டப்படி யாரெல்லாம் தகுதியுடையவர்கள்? 



தொழிற்சாலைகளில் தற்போது பல்வேறு வகையான புதுப்புது இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல ஆபத்துகளை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த அவல நிலையிலிருந்து அவர்களை பாதுகாக்க தொழிலாளர்கள் இழப்பீடுச் சட்டம், 1923 இயற்றப்பட்டது.

இங்கிலாந்து நாட்டு சட்டத்தின் அடிப்படையில் இந்த சட்டம் நம் நாட்டில் இயற்றப்பட்டிருந்தாலும் அந்த நாட்டில் உள்ளதுபோல அனைத்து தொழில்களிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களும் இழப்பீடு பெற முடியாது. மாறாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இழப்பீடு கிடைக்கும்.

(குறிப்பு :- தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம் 1948, நாட்டில் அமுலாக்கத்திற்கு வந்த பின்பு அந்த சட்டத்தின் அமுலாக்கத்திற்கு உட்பட்டு இழப்பீடு பெற உரிமை உள்ளவர்கள் எவரும் தொழில் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியாது என்பது கவனிக்கப்படதக்கதாகும். ஊதிய வரம்பின்றி அனைத்து தொழிலாளர்களும் இந்த சட்டத்தின்படி இழப்பீடு பெறலாம்)

தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் இறந்து போன தொழிலாளிக்காக இழப்பீடு கோரும் நபர் இந்த சட்டத்தின்படி "சார்ந்திருப்பவராக" இருத்தல் வேண்டும். 'சாரந்திருப்பவர்' என்பது தொழிலாளியின் வாரிசுகள் அல்லது உறவினர்கள் எல்லாரையும் குறிக்காது. உறவுமுறை மட்டுமில்லாமல் ஓரளவாவது இறந்து போன தொழிலாளியின் வருமானத்தை நம்பியிருப்பதே சாலந்திருத்தலாக கருதப்படுகிறது. அவ்வாறான நபர்களே இழப்பீடு கோரி முதலாளியிடம் மனு செய்து கொள்ள தகுதியான நபர்கள் ஆவார்கள்.

இந்த சட்டத்தின் பிரிவு 2(1)(d) தொழிலாளியின் உறவினர்களை 3 வகையாக பிரித்துள்ளது.

1. முதல் வகையில் வருகிற 'சார்ந்திருப்பவர்கள்' என கருதப்படும் உறவினர்கள் யார் என்றால் -

விதவை,

உரிய வயதடையாத முறைப்படி பிறந்த மகன் அல்லது தத்தெடுக்கப்பட்ட மகன் (a minor legitimate or adopted son),

முறைப்படி பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட திருமணமாகாத மகள்

விதவை தாய் (widowed mother)

இந்த முதல் வகையில் வருகிற 4 உறவினர்களும் தங்களது வாழ்க்கைக்கு இறந்து போன தொழிலாளியின் சம்பாத்தியத்தை நம்பியிருந்தால் சரி, நம்பியிராவிட்டாலும் சரி அவர்கள் 'சார்ந்திருப்பவர்களாகவே' கருதப்படுவார்கள்.

2. இரண்டாம் வகையில் கீழ்க்கண்ட உறவினர்கள் சார்ந்திருப்பவர்களாக கருதப்படுகிறார்கள்

தொழிலாளி விபத்தில் இறந்த சமயத்தில் அந்த தொழிலாளியின் வருமானத்தை தனது வாழ்விற்கு முழுமையாக நம்பியிருந்த 18 வயது நிரம்பியுள்ளதாகவும் மனவளர்ச்சி குன்றியதாகவும் (infirm) உள்ள மகன் அல்லது மகள் (தத்தெடுக்க மகன், மகள் உட்பட)

இந்த வகை வருகிறவர்கள் 'சாரந்திருப்பவர்' என கூறப்படுவதற்கு மனவளர்ச்சி குன்றிய யவர்களாக (infirm) இருப்பதோடு தொழிலாளியின் வருமானத்தை முழுமையாக (wholly dependant) நம்பியிருப்பதை நிரூபித்தல் அவசியமாகும்.

3. மூன்றாம் வகையில் வருகின்ற கீழ்க்கண்ட உறவினர்கள் 'சாரந்திருப்பவர்' என கூறப்படுவதற்கு அவர்கள் இறந்து போன தொழிலாளியின் வருமானத்தை அவர் இறக்கும் சமயத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நம்பியிருத்தல் அவசியமாகும். அத்தகைய உறவினர்கள் யாரென்றால்

மனைவியை இழந்தவர் (a widower)

பெற்றோர் (இதில் விதவை தாய் அடங்காது) (a parent other than a widowed mother)

முறையில்லா மணப்பிறப்பின் மூலம் பிறந்து (illegitimate minor son) உரிமை வயதை அடைந்திராத மகன் மற்றும் முறையில்லா மணப்பிறப்பின் மூலம் பிறந்த திருமணமாகாத மகள் அல்லது முறைப்படியான மணப்பிறப்பின் மூலமாக பிறந்த அல்லது அவ்வாறு இல்லாமல் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட ஒரு மகளானவள் திருமணமாகியும் உரிய வயதை அடையாமல் இருந்தால் அவர் அல்லது விதவையாக இருக்கிறதோடு உரிய வயதடையாத அத்தகைய மகள்

உரிய வயதடையாத சகோதரன் அல்லது தொழிற்தீர்ப்பாயம் சகோதரி (Minor brother or unmarried sister) அல்லது உரிய வயதடையாத விதவையாயிருக்கும் சகோதரி

விதவை மருமகள்

தனக்கு முன்பாகவே இறந்து போன மகனின் உரிய வயதடையாத மகன்

தனக்கு முன்பாகவே இறந்துவிட்ட மகளின்/தத்தெடுக்கப்பட்ட மகளின் உரிய வயதடையாத பிள்ளை ( எனினும் அந்த பிள்ளைக்கு பெற்றோர் யாரும் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்)

தொழிலாளியின் பெற்றோர் உயிரோடு இல்லாதபட்சம் அவரின் தந்தை வழியிலான தாத்தா மற்றும் பாட்டி

மேலே சொல்லப்பட்ட 3 வகைகளிலும் வருகின்ற உறவினர்கள் மட்டுமே 'சாரந்திருப்பவர்' என்ற தகுதியை பெற முடியும். மேலும் அவர்கள் தங்களது சாரந்திருத்தலை நிரூபிக்க வேண்டும். அதனடிப்படையில் தான் இழப்பீடு கோரவும், வழக்கு தாக்கல் செய்யவும் முடியும். அத்தகைய அனைவருக்கும் சமமான அளவில் இழப்பீடு கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...