Skip to main content

அமெரிக்காவுக்கு சவூதி அரேபியா மிரட்டல் !

அமெரிக்காவுக்கு சவூதி அரேபியா மிரட்டல் !


துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவூதி அரேபியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க இருப்பதாக வெளியான செய்திக்கு, 
30 க்கும் மேற்பட்ட கொள்கை முடிவுகளை சவூதி அரேபியா மேற்கொள்ளும் என அல்அரபியா பத்திரிகை (Al Arabiya News) எதிர் மிரட்டல் விடுத்துள்ளது...

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் :

1. கச்சா எண்ணெய் உற்பத்தியினை நிறுத்தி வைக்கும். இதனால், அதன் விலை 200 டாலர் அல்லது அதனைவிட இருமடங்கைக் கூட எட்டலாம்...

2. எண்ணெய் விற்பனைக்கான கரன்ஸியை டாலரிலிருந்து ரஷ்யா அல்லது சீனா கரன்ஸிக்கு மாற்றியமைக்கும். இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு மண்ணைக் கவ்வும்...

3. மத்திய கிழக்கில் முக்கியப் பிரச்சனைக்குரிய நாடுகளான ஈராக், சிரியா, இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகியவை சுற்றியிருக்கும் சவூதி அரேபியாவின் வடமேற்கு எல்லையிலுள்ள தபூக்கில் ரஷ்யாவின் இராணுவ முகாம் அமைக்கப்படும். இது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அதிகாரத்தைத் துடைத்தெறியும்...

4. ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து இராணுவ உதவிகளை சவூதி பெறும். அமெரிக்க இராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சவூதி அரேபியா கொள்முதல் செய்யும் 10 சதவீத இராணுவ தளவாட இறக்குமதியை நிறுத்தும்.
85 சதவீதத்தை அமெரிக்க இராணுவமும் மீதம் 5 சதவீதம் மட்டுமே உலக நாடுகளும் கொள்முதல் செய்யும் நிலையில் அமெரிக்காவிடமிருந்து சவூதி அரேபியா அஇராணுவ உபகரணங்கள் வாங்குவதை நிறுத்தினால், அது அமெரிக்காவின் இறுதி முடிவாக்க்கூட அமையலாம்...

5. ஈரானின் கைகளில் மத்தியக் கிழக்கு முழுமையாக செல்லும். இதன் மூலம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் சவூதியின் நட்புகளாக மாறும். இது இஸ்ரேலின் இருப்புக்கு மரணத்தொடக்கமாக அமையும்...

6. இஸ்ரேலின் முக்கிய கடல் பிரதேசமான செங்கடலை சவூதி அரேபியா, ஈரான், ரஷ்யா துணையுடன் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்...

7. அமெரிக்காவில் சவூதி அரேபியா மேற்கொண்டிருக்கும் 800 பில்லியன் டாலர் முதலீட்டை முடிவுக்குக் கொண்டு வரும்...

சுமார் 30 முடிவுகளில் சவூதி அரேபியா நேரடியாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் மட்டுமே அமெரிக்காவின் பொருளாதாரத்தை மொத்தமாக நசுக்குவதற்குப் போதுமானவை. எனவே, சவூதி அரேபியாவின் மீது அமெரிக்கா கொண்டுவர விரும்பும் பொருளாதாரத் தடை என்பது நிஜத்தில் அமெரிக்காவின் முடிவுக்கே வழிவகுப்பதோடு மொத்த உலகினையும் பொருளாதார ஆட்டம் காண வைக்கும் என அப்பத்திரிக்கை கூறியுள்ளது...

இவ்வளவு பலத்தைக் கையில் வைத்துக்கொண்டா சவூதி அரேபியா அமெரிக்காவின் கைப்பாவையாக இயங்குகிறது என வியப்பு மேலிடுகிறது...

முதலாளித்துவ வல்லூறும், மன்னராட்சி ஏகாதிபத்தியமும், சேர்ந்து நடத்தும் சதிராட்டம் என்றாவது ஒருநாள் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும்...

நல்லதே நடக்கட்டும் !

http://english.alarabiya.net/en/views/news/middle-east/2018/10/14/OPINION-US-sanctions-on-Riyadh-means-Washington-is-stabbing-itself.html#

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...