Skip to main content

இளையராஜா அவர்களே உங்கள் வார்த்தையில் கவனம் தேவை! ( உங்களுக்கு நினைவு இருக்கிறதா?? )

விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜா

https://tamil.news18.com/news/entertainment/music-director-ilayaraja-participated-in-the-ceremony-at-college-in-coimbatore-63695.html

விசில் அடிப்பவர் எல்லாம் கம்யூனிஸ்ட் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் விசில் அடிக்கலாம் .



மதுரையில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து வாய்ப்புகள் தேடியது மறந்து போச்சா ? அல்லது கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடி வயிற்றை கழுவியதும் மறந்துபோச்சா??

இசைஞானி இளையராஜா சமீபகாலமாக இவ்வாறு தலைகனம் பிடித்து பேசுவது  அவர் மேல் வைத்திருக்கும் மறியாதையை குறைக்கிறது.

உயர உயர பறத்தாலும் ஊர் குருவி பருந்து ஆகுமா...?

பாசிச கும்பலுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜால்ரா தட்டுவது எந்தவகை ராகமோ..?

இசையால் அமைதியையும், அன்பையும் வளர்க்கவும்,  வன்முறை எண்ணத்தை தடுக்கவும் சக்தி உண்டு என்று அங்கலாய்க்கும் ராஜாவே மாணவர் விசில் அடித்து தங்கள் ஆதரவை தெரியப்படுத்த நினைக்கும் போது , பல ஆயிரம் ராகங்களோடு வாழ்ந்த உமக்கு அந்த பொறுமையும், அன்பும் எங்கே போய்விட்டது..??

விசில் அடித்த மாணவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று விமர்சித்த இளையராஜாகோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, தான் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கடவுள் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என்று விமர்சித்தார்.

கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது விசில் அடித்த மாணவர்களை கடவுள் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட்டுகள் என இளையராஜா கடிந்து கொண்டார்.கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் இசைஞானியுடன் ஒரு இசை மாலை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக அவரை வரவேற்று மாணவர்கள் பாடல்களை பாடினர்.

மாணவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, 1974 ஆம் ஆண்டு மூகாம்பிகை கோயிலுக்கு சென்ற நிகழ்வு குறித்து பேசினார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள் விசில் அடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளையராஜா, கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் என மாணவர்களை கண்டித்தார்.

தொடர்ந்து, இசை குறித்து பேசிய இளையராஜா ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பைத்தியம் என்றும், தன்னை இசைப் பைத்தியம் என்றும் குறிப்பிட்டார்.

இசையை கற்றுக்கொண்டால் வன்முறைக்கு போக தோன்றாது எனக்கூறிய அவர், மேடையில் பாடிய மாணவர்களை அழைத்து “காற்றில் வரும் கீதமே” பாடலை ஒன்றாக பாடினார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், கவிஞர் கண்ணதாசனுக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறினார்.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...