Skip to main content

சுதந்திர இந்தியாவில் ஒரு போலீஸ் படை நடத்திய மிக மோசமான கூட்டுப் படுகொலை

மீரட்டில் முஸ்லிம்கள் 42பேர் கொல்லப்பட்ட வழக்கில் 31 ஆண்டுகள் கழித்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு



1986 ஆம் ஆண்டு பாபர் மசூதி சீல் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பதட்டம் ஆரம்பித்தது. இந்நிலை இரு சமூகத்தின் தலைவர்களுடைய உணர்ச்சி தூண்டும் பேச்சுகளால் தூண்டப்பட்டு 1987 மார்ச்சில் கலவரமாக வெடித்தது.

ஜூன் மாதம் வரை தொடர்ந்த இக்கலவரத்தில் 390 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை ஒருவர்கூட இக்கலவரக் குற்றத்தில் தண்டிக்கப்படவில்லை.

இக்கலவரத்தின்போது, மீரட் நகரிலுள்ள ஹாஷிம்புரா கிராமத்திலிருந்து குழந்தைகள், முதியவர்களை நீக்கிவிட்டு 65 முஸ்லிம் இளைஞர்களை உ.பி. சிறப்பு இராணுவப்படையினைச் சேர்ந்த சிப்பாய்கள் லாரிகளில் ஏற்றிச் சென்று சுட்டுக்கொன்று, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த கால்வாயில் வீசி சென்றனர்.



1988 முதல் 2015 வரை நடந்த பல்வேறு விசாரணை மற்றும் இழுத்தடிப்புக்கு பிறகு குற்றம் சாட்டபட்டவர்கள் அணைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்தனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த மேல் முறையீட்டு விசாரணையின் இறுதியில், இன்று 2018 அக்டோபர் 31 ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்தாம் எனவும் அவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் 16 சிப்பாய்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்து சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி, மேலும் 14 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு, அதிகாரத்தின் அத்தனை கைகளையும் கொண்டு இல்லாமலாக்க முயற்சி செய்யப்பட்ட இந்தக் கொடூர கொலைக்கு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவில் ஒரு போலீஸ் படை நடத்திய மிக மோசமான கூட்டுப் படுகொலைதான் ஹாஷிம்புரா படுகொலைகள்.

ஆனால் சுட்டுத் தள்ளப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் தப்பிப் பிழைத்த நான்குபேர் இப்படுகொலைகளை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தனர்.

http://www.puthiyavidial.com/ஹாஷிம்புராஇரத்தத்தை-உறை/

Comments

  1. இதனால் யாருக்கு லாபம்
    இப்படிப்பட்ட நீதி தேவையா? இந்த நீதி மறுக்கப்பட்ட உண்மை மறைக்கப்பட்ட மக்களின். உரிமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

வாய்தா என்றால் என்ன ?? ( சட்டம் அறிந்துகொள்வோம் )

வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன? வாய்தா என்றால் என்ன வாய்தா நடைமுறைகள் என்ன?  ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும் வாய்தா வழங்கும் மு றை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது. பிரிவு 309 – Power to postpone or adjourn Proceedings – 1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் வரம்புரையாக – இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க ...