CPC - Order 8 Rule 9 - Addl Return Statement
==============================================================
ஒரு உரிமையியல் வழக்கில் சாட்சிகள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதற்கு பிறகு கூடுதல் எதிர் வழக்குரையை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கும் படி கோரித் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது நீதிமன்றங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேற்படி சட்டப் பிரிவினை பார்க்கும் போது, எதிர் வழக்குரை தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் கூடுதல் எதிர் வழக்குரையை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய முடியும் என்பது தெரிய வருகிறது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் வழக்குரையில் கண்ட சங்கதிகளுக்கு மாறுபட்ட சங்கதிகளை அந்த கூடுதல் எதிர் வழக்குரையில் வைக்கக்கூடாது என்று பல தீர்ப்புகளில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் வாதி தன் வழக்கை நிரூபிக்க ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட எதிர் வழக்குரையில் கூறப்படாத சங்கதிகளையும் குறித்து கூடுதல் எதிர் வழக்குரையில் குறிப்பிடலாம். ஆனால் அந்த சங்கதிகள் வழக்கிற்கான முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டும். எனவே கூடுதல் எதிர் வழக்குரையை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை நீதிமன்றம் எளிமையாக பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 2336/2012, DT - 26.8.2016, K.Jegan and others Vs Arumugam 2016-4-LW-736
==============================================================
ஒரு உரிமையியல் வழக்கில் சாட்சிகள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதற்கு பிறகு கூடுதல் எதிர் வழக்குரையை தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கும் படி கோரித் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது நீதிமன்றங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேற்படி சட்டப் பிரிவினை பார்க்கும் போது, எதிர் வழக்குரை தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தான் கூடுதல் எதிர் வழக்குரையை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய முடியும் என்பது தெரிய வருகிறது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர் வழக்குரையில் கண்ட சங்கதிகளுக்கு மாறுபட்ட சங்கதிகளை அந்த கூடுதல் எதிர் வழக்குரையில் வைக்கக்கூடாது என்று பல தீர்ப்புகளில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் வாதி தன் வழக்கை நிரூபிக்க ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட எதிர் வழக்குரையில் கூறப்படாத சங்கதிகளையும் குறித்து கூடுதல் எதிர் வழக்குரையில் குறிப்பிடலாம். ஆனால் அந்த சங்கதிகள் வழக்கிற்கான முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டும். எனவே கூடுதல் எதிர் வழக்குரையை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டு தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை நீதிமன்றம் எளிமையாக பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRP. NO - 2336/2012, DT - 26.8.2016, K.Jegan and others Vs Arumugam 2016-4-LW-736

Comments
Post a Comment