இன்று இந்தியா முழுவதும் Me too என்ற ஹேஸ்டேக் பற்றி பரவலாக பேசப்படுகிறது...
கஷ்மீரில் இந்திய ராணுவம் செய்துவரும் மனித உரிமை மீறல்கள் அப்பாவிப் பெண்களை சிறுமிகளை குழந்தைகளை கற்பழித்து போலி என்கவுன்டரில் சுட்டு படுகொலை செய்வதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்..
ஆனால் இது அனைத்தும் ஏற்க மறுக்கும் சில குறுகிய மனம் கொண்ட மக்களுக்காக இந்த பதிவு... இந்திய ராணுவம் இன்று காஷ்மீரில் என்ன செய்து வருகிறதோ அதே போல் கடந்த 2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்திலும் செய்தது…
15 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 15ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 12 பெண்கள் இந்திய ராணுவ படையின் தலைமையகமான கங்கலா கோட்டைக்கு முன்பு #நிர்வானமாக நின்று இந்திய ராணுவமே எங்களையும் கற்பழித்து கொன்றுவிடு என்று ரத்தத்தால் எழுதப்பட்ட வாக்கியங்களுடன் நின்றார்கள்…
இதற்கான காரணம் தங்கஜம் மனோரம்மா இன்னும் 32 வயது பெண்மணியை புரட்சிப் படையை சேர்ந்தவர் என்று இந்திய ராணுவ படை வீடு புகுந்து எந்த ஆதாரமும் விசாரணையும் இன்றி தூக்கிச் சென்றது….
இரண்டு நாட்களுக்கு பிறகு அவருடைய சடலம் தெருவில் கொடூரமான நிலையில் மக்கள் கண்டனர்…
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அப்பெண்மணி பல முறை கற்பழிக்கப்பட்டு பிறகு மறைவான இடங்களில் 16 தோட்டாக்கள் பாய்ச்சி கத்தியால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்கள் என்று தெரியவந்தது…
இதை அறிந்து கொண்ட மக்களை வேதனையிலும் கோபத்திலும் பொங்கினார்கள்…
1977 ஆம் ஆண்டு மெரா கைபி ( Meira kaibi ) எனும் புரட்சி படை உருவாக்கப்பட்டது… இது போன்ற அப்பாவி பெண்கள் இரவு நேரங்களில் கற்ப்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதை தடுப்பதற்காக பெண்கள் போராளிகள் போல் இரவு நேரங்களில் தீ பந்தத்துடன் உலா வருவார்கள்…
இந்த அமைப்பை சார்ந்த 12 பெண்கள் யாருமே எதிர் பார்க்காத வகையில் போராடினார்கள்… போராட்டத்தின் தாக்கம் இந்திய இராணூவாத்தை அதனுடைய தலமையகத்தை விட்டு வெளியேற செய்தது…
பிறகு அப்பெண்கள் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள்…
உச்சநீதிமன்றம் இந்திய இராணுவத்தின் இச்செயலை கண்டித்தது மட்டுமல்லாமல் Armed forces special power act சட்டத்தை தவறாக பயன்படுத்தி 2000 க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்து இந்திய இராணுவத்திடம் அதற்கான சரியான காரணம் மற்றும் வழக்கு விவரங்களையும் கேட்டது….
என்ன பயன் தங்கஜம் மனோரம்மாவை கொன்ற எந்த குற்றவாளிகளுக்கும் இதுவரை தண்டனைகள் வழங்கப்படவில்லை சுதந்திரமாக தான் உலா வருகிறார்கள்…
இது போன்ற சட்டம் அமலில் உள்ள இடங்களில் இராணுவ வீரர்களை #மத்திய_அரசினுடைய பாதுகாப்பு துறை அல்லது உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி விசாரிக்கவோ கைது செய்யவோ அனுமதியில்லை…
இது போன்ற வழக்குகளில் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டது இல்லை தண்டிக்கப்பட்டதும் இல்லை….
இது போன்ற இடங்களில் பெண்களை சிறுமிகளை ஈவு இரக்கமின்றி கற்ப்பழித்த கொலை செய்து வீசுவது ஒரு சராசரி நடவடிக்கையாகவே உள்ளது…
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குறித்து பேசும் இந்த தருணத்தில் அன்று இந்திய இராணுவம் #மணிப்பூரில் பெண்களுக்கு செய்த கொடுமையை இன்று கஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறக்கவும் மன்னிக்கவும் இயலுமா…??
மதிப்பிற்குரிய இந்திய இராணுவத்தின் தியாகங்கள், செயல்கள் அனைத்தும் நிச்சயமாக போற்றப்பட வேண்டியவைகள் தான்… அதற்காக அவர்கள் செய்யும் மனித உரிமை மீறல்கள் செயலை பொறுத்து கொண்டு கண்டும் காணாமல் இருப்பது எவ்விதத்தில் நியாயம்…??
அப்பொழுது ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் கொண்ட நாட்டிற்கும்
இராணுவத்தின் கீழ் உள்ள ஆட்சிக்கும் ( martial law ) என்ன வேறுபாடு உள்ளது..??
ஜெய்ஹிந்த்

Comments
Post a Comment