இணையத்தளம் மற்றும் Mobile Application-கள் மூலம் பலதரப்பட்ட சேவைகள் இக்காலத்தில் கிடைத்து வருகிறது.
அதில், சமீபத்திய வரவானவை Online Food Delivery சேவைகள்.
நாம் இருக்கும் இடத்திற்கு கேட்கும் உணவுகளை குறுகிய நேரத்தில் எடுத்து வந்து சேர்க்கின்றனர்.
இந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக அளிக்க தனியார் நிறுவனங்கள் Delivery Boys(விநியோகப் பணியாளர்கள்) என்ற பெயரில் இளைஞர்களை பணியில் அமர்த்தி செயல்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களின் தேவைகளை Mobile Application மூலம் ஏற்கும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் விநியோகப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் Delivery செய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதிக விநியோகம் செய்தால் கூடுதல் ஊக்கத்தொகை தரப்படுவதால், விநியோக பணியாளர்கள் சாலை விதிகளை மதிக்க மறுக்கின்றனர். அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக விநியோகப் பணியாளர்கள் பின்வரும் செயல்களில் ஈடுபடுவதை தினமும் காண முடிகிறது.
விரைவாக Delivery செய்ய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது.
சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பயணிப்பது. (சமீபத்தில் வேளச்சேரி மேம்பாலத்தில் தவறான திசையில் பயணிப்பதை காண முடிந்தது)
செல்போன்-ஐ பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது
ஹெல்மெட் அணியாமல் ஹெட்போன் உடன் வாகனம் ஓட்டுவது
சிக்னல், யூ டர்ன் மற்றும் மற்ற சாலை விதிகளை புறக்கணிப்பது
மேற்கூறிய சாலைசட்ட விதிமீறல்கள் தினம் நூற்றுக்கணக்கில் நடந்துவருவதை சென்னை மாநகரில் தொடர்ந்து காணமுடிகிறது. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகம் உள்ள OMR மற்றும் ECR நெடுஞ்சாலைகளில் இது போன்ற செயல்களை அதிகமாக காண முடிகிறது. இச்சாலைகளில் விபத்துகளும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.
எடுத்துகாட்டாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை துரைப்பாக்கம் பகுதியில் எதிர் திசையில் வந்த Swiggy நிறுவன விநியோகப் பணியாளர், நண்பர் ஒருவர் மீதி மோதி விபத்துக்குள்ளாக நேரிட்டது. அந்த இடத்தில் வயதான நபரோ அல்ல பெண்களோ பயணிக்க நேரிட்டிருந்தால் அது பெரிய விபத்தாகியிருக்ககூடும். இது போன்ற சாலை விதிமீறல்கள் தினம் நடப்பதால், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. அது தவிர, விநியோக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவற்றை பொதுமக்கள் மற்றும் விநியோகப் பணியாளர்கள் நலன் கருதி உடனடியாக தடுத்திட ஆவன செய்ய ஏதுவாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
நோய்களை விட சாலை விபத்துகளே தமிழ்நாட்டில் 2018இல் (ஜூலை வரை. 7256 பலி) அதிக உயிர்களை காவு வாங்கிருக்கிறது என்பதயும் குறிப்பிட விரும்புகிறேன்.இதை பரிசீலித்து Swiggy, Uber Eats, Zomato மற்றும் இத்துறையில் இயங்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை சார்பில் அளிக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகிறேன். பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறோம். .
- சமூக - புலன் விசாரணை ( IRA )
அதில், சமீபத்திய வரவானவை Online Food Delivery சேவைகள்.
நாம் இருக்கும் இடத்திற்கு கேட்கும் உணவுகளை குறுகிய நேரத்தில் எடுத்து வந்து சேர்க்கின்றனர்.
இந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு விரைவாக அளிக்க தனியார் நிறுவனங்கள் Delivery Boys(விநியோகப் பணியாளர்கள்) என்ற பெயரில் இளைஞர்களை பணியில் அமர்த்தி செயல்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களின் தேவைகளை Mobile Application மூலம் ஏற்கும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் விநியோகப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் Delivery செய்யப்படும் என வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதிக விநியோகம் செய்தால் கூடுதல் ஊக்கத்தொகை தரப்படுவதால், விநியோக பணியாளர்கள் சாலை விதிகளை மதிக்க மறுக்கின்றனர். அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக விநியோகப் பணியாளர்கள் பின்வரும் செயல்களில் ஈடுபடுவதை தினமும் காண முடிகிறது.
விரைவாக Delivery செய்ய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணிப்பது.
சாலையின் எதிர்திசையில் அதிவேகமாக பயணிப்பது. (சமீபத்தில் வேளச்சேரி மேம்பாலத்தில் தவறான திசையில் பயணிப்பதை காண முடிந்தது)
செல்போன்-ஐ பயன்படுத்திக்கொண்டு வாகனம் ஓட்டுவது
ஹெல்மெட் அணியாமல் ஹெட்போன் உடன் வாகனம் ஓட்டுவது
சிக்னல், யூ டர்ன் மற்றும் மற்ற சாலை விதிகளை புறக்கணிப்பது
மேற்கூறிய சாலைசட்ட விதிமீறல்கள் தினம் நூற்றுக்கணக்கில் நடந்துவருவதை சென்னை மாநகரில் தொடர்ந்து காணமுடிகிறது. குறிப்பாக, மென்பொருள் நிறுவனங்கள், கல்லூரிகள் அதிகம் உள்ள OMR மற்றும் ECR நெடுஞ்சாலைகளில் இது போன்ற செயல்களை அதிகமாக காண முடிகிறது. இச்சாலைகளில் விபத்துகளும் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.
எடுத்துகாட்டாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை துரைப்பாக்கம் பகுதியில் எதிர் திசையில் வந்த Swiggy நிறுவன விநியோகப் பணியாளர், நண்பர் ஒருவர் மீதி மோதி விபத்துக்குள்ளாக நேரிட்டது. அந்த இடத்தில் வயதான நபரோ அல்ல பெண்களோ பயணிக்க நேரிட்டிருந்தால் அது பெரிய விபத்தாகியிருக்ககூடும். இது போன்ற சாலை விதிமீறல்கள் தினம் நடப்பதால், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. அது தவிர, விநியோக பணியாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இவற்றை பொதுமக்கள் மற்றும் விநியோகப் பணியாளர்கள் நலன் கருதி உடனடியாக தடுத்திட ஆவன செய்ய ஏதுவாக தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
நோய்களை விட சாலை விபத்துகளே தமிழ்நாட்டில் 2018இல் (ஜூலை வரை. 7256 பலி) அதிக உயிர்களை காவு வாங்கிருக்கிறது என்பதயும் குறிப்பிட விரும்புகிறேன்.இதை பரிசீலித்து Swiggy, Uber Eats, Zomato மற்றும் இத்துறையில் இயங்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை சார்பில் அளிக்க வழிவகை செய்யுமாறு வேண்டுகிறேன். பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறோம். .
- சமூக - புலன் விசாரணை ( IRA )



Comments
Post a Comment