Skip to main content

ராவ் இந்துத்துவ கலாச்சாரத்தின் சாம்பியன்’ Rav is the champion of Hindu culture

சிபிஐ இயக்குநர் ராவின் இந்துத்துவப் பின்னணி!




மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐக்கு அவசர அவசரமாக இயக்குநராக 23ஆம் தேதி இரவு நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பற்றிய பல்வேறு புலனாய்வுத் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் அஸ்தானா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக இருவரையும் நீண்ட விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில் ஆந்திராவைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ் என்கிற அதிகாரியை சிபிஐ இயக்குநராக நியமித்தது.

இவரது நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நாகேஸ்வர ராவ் முக்கியக் கொள்கை முடிவுகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்தான்... நாட்டின் முக்கியமான புலனாய்வுத் துறையின் இயக்குநரான நாகேஸ்வர ராவ் இந்துத்துவ இயக்கங்களின் பின்புலம் கொண்டவர் என்பதும், அவரது நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பவர்கள் என்றும் தி எகனாமிக் டைம்ஸ் நேற்று (அக்டோபர் 26) செய்தி வெளியிட்டுள்ளது. ‘ராவ்... இந்து கலாச்சாரத்தின் சாம்பியன்’ என்ற தலைப்பில் வெளியான அந்தச் செய்தியின் முக்கிய அம்சங்கள் இதோ...

நாகேஸ்வர ராவ் ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தில் வேதியியல் முதுநிலைப் பட்டம் பெற்றவர். அதன் பின் சென்னை ஐஐடியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்தவர்.

இந்து இயக்கங்களோடு நெருங்கியத் தொடர்புடைய நாகேஸ்வர ராவ் கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான சட்டப் பிரிவுகளை அகற்றுவது, மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு எதிரான கருத்துருவாக்கப் பணிகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.

2016ஆம் ஆண்டு சிபிஐக்கு இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், ஆர்எஸ்எஸ், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் ராம் மாதவ்வின் நெருங்கிய நண்பர். ராம் மாதவ் நடத்திவரும் இந்தியா ஃபவுண்டேஷன், சர்வதேச விவேகானந்தா ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளின் சார்பில் நடக்கும் இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் நாகேஸ்வர ராவ் பங்கேற்க கூடியவர்.

டெல்லியில் இந்திய கலை, கலாச்சார தேசிய டிரஸ்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஸ்ரீஜன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்துக்களின் முக்கிய கோரிக்கைகள்,பிரச்சினைகள் என்ன என்பது பற்றி வரையறுப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இதில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டன.

கோயில்களை அரசு நிர்வகிக்கக் கூடாது, வெளிநாட்டு நிதி உதவி பெறும் இந்து விரோத தொண்டு நிறுவனங்கள் அந்த நிதியை பெறுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவருதல், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடை, இந்து கலாச்சார செயல்பாடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகள் அங்கே வெளியிடப்பட்டன. மேற்கண்ட இந்துக்களின் முக்கிய பிரச்சினைகளை வகைப்படுத்தி வரையறை செய்த ஏழு பேர்களில் தற்போதைய சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் பற்றி இந்து முக்கியஸ்தர்கள் பிரதமரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறார்கள் என்றும் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாகேஸ்வர ராவ், சுமார் இரண்டு மணி நேரம் சின்னச் சின்ன இந்து இயக்கப் பிரமுகர்களோடு கலந்துரையாடியதாகவும் எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவிக்கிறது. இது தொடர்பாக நாகேஸ்வர ராவின் விளக்கத்தைப் பெற அந்த ஏட்டில் இருந்து தொடர்புகொண்டபோது அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை என்றும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.

ஆக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ பின்புலம் கொண்ட ஒருவர் சிபிஐ இயக்குநர் என்ற நாட்டின் மிக உயர்ந்த, பொறுப்பு மிக்க பதவியில் இரவோடு இரவாக அமர வைக்கப்பட்டிருக்கிறார்.

வெள்ளி, 26 அக் 2018
© 2017 மின்னம்பலம் அமைப்பு.

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...