Skip to main content

மறக்க முடியுமா? நவம்பர் - 08

கும்மிருட்டில் குண்டூசி தேடிய மோடி

இரவு நேரம் வெளியூர் சென்று விட்டு திரும்பும்வழியில் திடீரென அறிவிக்கப்படுகிறது



நீங்கள் கையில் வைத்திருக்கும்
உங்களுக்கு சொந்தமான பணம்
இனி செல்லாது என்ற மோடியின்  அறிவிப்பு

நாட்டு மக்கள் செய்வதறியாது நடுத்தெருவில் நாதியற்றவர்களாய் நிறுத்தப்பட்டார்கள்



பணமின்றி  நோய் குணப்படுத்தமுடியாமல்
நோயாளிகள் திணறினார்கள்

வங்கி வருசையில் நின்று
வயோதிகர்கள் மடிந்தார்கள்

நாங்கள் எத்தனையோ வங்கி வரிசையை பார்த்து விட்டோம்
ஒரு வரிசையிலும்



அதானியும் அம்பாணியும் நிர்கவில்லை
ஸ்டார் நடிகர்களும் நிர்கவில்லை
அரசியல் ஜாம்பவான்களும் இல்லை

வங்கி வரிசையில் நின்றது எல்லாமே
ஏழைகள் நடுத்தர வற்க்கத்தினர்கள்

கருப்பு பணத்தை பிடிக்க போகிறோம் என்றார்கள்
கருப்பு பணத்திற்கு சொந்தக்காரர்கள் யாருமே அன்று வரிசையில் காணமுடியவில்லை

பாசிச ஆட்சியின் காலமும் முடியப்போகிறது

கலர் கலராக புதுப்புது பணம் அச்சடித்தார்கள்



ஆனால்  அந்த கருப்பு பணத்திற்கு மட்டும்  இன்னும் விடை காண முடியவில்லை

Comments