Skip to main content

சட்டப்பிரிவு 49P பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருந்தது ஏன்?

49P என்கிற சட்டப்பிரிவு கூறுவது இது தான்:- 



இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 18 வயதை கடந்துவிட்டால் வாக்களிக்கும் உரிமையை பெற்றுவிடுவார்கள்.

 இதற்காக அவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டால் இந்தியாவில் அவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் எந்த தேர்தலிலும் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அந்த வகையில் எந்த ஒருவரும் தனது ஓட்டை மட்டுமே போட வேண்டும்.

யாராவது கள்ள ஓட்டாக நம் ஓட்டை போட்டுச் சென்றுவிட்டார் அதற்கு 49P தீர்வாகிறது.

இந்த வகையில் நமது ஓட்டை ஒருவர் போட்டுச் சென்றுவிட்டார், உண்மையில் அந்த ஓட்டுக்கு உரியவர் நாம் தான் என்கிற ஆதாரத்தை நாம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

 இதனை அவர் ஏற்கும் பட்சத்தில் நமது ஓட்டை வேறு யாரும் போட்டுச் சென்று இருந்தாலும் கூட நாமும் ஓட்டுப்போட முடியும்.

ஆனால் நாம் வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டோம்.

மாறாக நமக்கு வாக்குச் சீட்டு தருவார்கள்.

அதில் நாம் நமக்கு பிடித்த நபரின் பெயருக்கு அருகே பெருக்கல் குறி (X) இட்டு அதனை மடித்து தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.

இந்த வாக்கை தபால் ஓட்டுடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணுவார்கள்.

அதாவது கள்ள நோட்டு போடப்பட்டால் நமது வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்று நாம் கவலைப்பட வேண்டியது இல்லை.

 மாறாக 49P பிரிவை பயன்படுத்தி நாம் நம் ஓட்டை போட்டுவிட்டு வரலாம் என்பதே இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

49 P என்ற ஒரு சட்ட விதியை ஒரு திரைப்படம் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டிய அளவில் நமது அறியாமை உள்ளது என்பதையும்.   இதற்கு முன்பு  எவ்வளவோ தேர்தலில் வாக்காளர்களின் ஓட்டுக்கள் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகத்திற்கும் இப்படி ஒரு சட்ட விதிமுறை இருப்பதும் தெரியவில்லையா...? 

வாக்குசாவடி மையத்தில் உள்ள வாக்குசாவடி கண்காணிப்பு அலுவலர்களுக்கு இதை பற்றி தேர்தல் ஆணையம் தகுந்த ஆலோசனை வழங்கவில்லையா....?

 தேர்தல் ஆணையம் ஏன் தாமாக முன்வந்து இந்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இதற்கு முன் கள்ள ஓட்டால் தங்கள் ஓட்டை இழந்தவர்களுக்கு இந்த விதியை பயன்படுத்தி அவர்களின் ஓட்டை திரும்ப அளிக்காமல் இருந்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமா....?

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

இந்தியாவை ஆட்சி செய்பவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ( இதை பார்த்தாவது திருந்துங்கள் )

கியுபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது, தனியார் கல்லூரிகளும் கிடையாது.  6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 99.8 சதவீதம் படிப்பறிவு பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால்தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர். தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கத...