Skip to main content

லால்பேட்டையில் தொடரும் வெறிநாய்களின் வெறிச்செயல் கண்டுக்கொள்ளாத பேரூராட்சி

"லால்பேட்டை முழுவதும் சுற்றித் திரியும் சொறி | வெறி நாய்கள் - அசம்பாவிதங்கள் நடக்கும் முன் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



லால்பேட்டையில் சில மாதங்களாக வெறி நாய்கள், சொறி நாய்கள்  தொல்லை பெரும் பிரச்சினையாக, பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.

லால்பேட்டை நகர் மக்கள் தொகை பெருக்கத்திலும், நகரின் எல்லை விரிவாக்க வளர்ச்சியிலும் உச்சம் அடைந்து வருகிறது.



அதே நேரம் வெறி நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இதனால் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும், தெருக்களில் தளர் நடை போடும் முதியவர்களும் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி பல முறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது பேரூராட்சி..

தெருவில் விடப்படும் நாய்கள் குட்டி போட்டு பல மடங்காக பெருகி வருகிறது.

அவை முறையாக பராமரிக்கப்படாததால் கிருமிகள் தாக்கி சொறி பிடித்து, நாக்கில் எச்சில் வடிந்து சொட்ட சொட்ட, பொதுமக்களை கடித்துக் குதற, தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து பொதுமக்களை காக்கும் நல் எண்ணத்தோடு பேரூராட்சி தலைவர் முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு..     

 தெருக்களில், மூர்க்கமாக அலையும் சொறி நாய்களின் பயத்தால் இரவில் மக்கள் நடமாட அச்சம் கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலையை காண முடிகிறது.

இந்த வெறி நாய்கள் ஊளையிட்டுக் கொண்டு சத்தம் போடுவதால் வீடுகளில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

இரவில் கூட்டம் கூட்டமாக அலைகின்றன.



என்று லால்பேட்டை பகுதி பொது மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

பல நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரை துரத்திக் செல்வதால் விபத்துகள் நேரிடவும் வாய்ப்பாக இருக்கிறது.

- IRA

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...