Skip to main content

வரலாற்றை மறைக்க முடியும் ஆனால் ஒருபோதும் அழிக்க முடியாது.

இந்துத்துவா அமைப்புகள், காவி கும்பல்கள் திப்பு சுல்தான் என்பவர் ஏதோ இந்துக்களின் விரோதி போல ஒரு பிம்பம் உருவாக்கி மக்கள் மத்தியில் போலியாக நச்சு கருத்தை பரப்புகிறார்கள்.. 



உண்மையில் திப்பு சுல்தான் என்பவர் யார்.?  

மக்களுக்கு என்ன செய்தார்.?

இந்துக்களையும் முஸ்லிம்களையும் இன்னும் பிற மக்களையும் எப்படி தனது ஆட்சி காலத்தில் நடத்தினார்.?

என்பதை கீழே பார்ப்போம்..

https://youtu.be/ofoPyXno168

1767ஆம் ஆண்டில் தனது 17வயதில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாணியம்பாடியில் முதல் வெற்றியை பதிவு செய்தார்  திப்பு சுல்தான்..

பின்பு இவர் போர் செய்த அனைத்திலும் பெரும்பாலும் வெற்றியே பெற்றார் திப்பு சுல்தான்..

ஆங்கிலேயர் இவரின் வலிமையை கண்டு வியந்து போனார்கள்..

"யுத்தங்களை போர்களத்திலேயே முடித்து கொள்ளுங்கள்.
ஒருபோதும் அப்பாவி மக்களின் மீது வன்முறை நடத்த கூடாது.
பெண்களை கௌரவமாக நடத்துங்கள்.
பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்பு கொடுங்கள்.
குழந்தைகள், முதியோர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்" என்று எழுத்து முலம் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்..

NASA விண்வெளி நுழைவாயிலை,
இவர் போர்களத்தில் பயன்படுத்திய ஏவுகணை புகைப்படம்தான் அலங்கரிக்கிறது.
ஏனென்றால் உலக வரலாற்றில் ஏவுகணைகளை போர்களத்தில் அறிமுகம் செய்த முதல் வீரர் திப்பு சுல்தான் அவர்களே..

மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துகாட்டாக விளங்கிய திப்பு சுல்தான்.

தனது ஆட்சி காலத்தில் 156 இந்து கோயில்களுக்கு தொடர்ந்து மானியம் வழங்கி கொண்டு இருந்தார்.

வழிபாட்டு தலங்களுக்கு செலவு செய்த 233959 ரூபாயில் இந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டுமே 213959'க்குமேல் செலவு செய்தார்.

நான்கு கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிகூடம்.

மதுவிலக்கு அமல்.

கோயில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையை நீக்கீனார்.

திருமணம் ஆடம்பரம் இல்லாமல் நடத்த விரும்பினார்.

விவசாயிகளுக்கு தரகர் இல்லாமல் நேரடி மானியம் கிடைக்க செய்தார்..

தென்னிந்திய மன்னர்களில் போர்க்களத்தில் உயிர் துறந்த ஒரே மன்னர் திப்புசுல்தான் மட்டுமே..

" திப்பு சுல்தான் தோல்வி அடைந்த பின்பு தான் இந்தியா முழுமையும் பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது"என்றார் மார்க்ஸ்.

தென்னிந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களை 1799 வரை காலூன்ற விடாமல் சீனப் பெருஞ்சுவர் போல தடுத்து நிறுத்திய பெருமை திப்புசுல்தானையே சாரும் என்றும் மார்க்ஸ் சொன்னார்..

குதிரைப்படையை நடத்துவதில் திப்புவின் ஆற்றலைப் பார்த்து பிரிட்டிஷ்காரர்கள் மிரண்டு போனார்கள்..

அவரது குதிரைப்படைநடத்தும் நிபுணத்துவத்தை உலகத்தின் சரி பகுதியை தன் குளம்படியின் கீழ் கொண்டு வந்த  செங்கிஸ்கானின் நிபுணத்துவத்திற்கு இணையாகச் சொன்னார்கள்..

ஆம்பூரைத் தாக்கப் போகிறார் என்று உளவுத்துறை பிரிட்டிஷ் தளபதிகளுக்கு தகவல் சொல்லும்  போது அவர் குதிரைப்படை கேரளத்தில் உள்ள கொடுங்களூரைத் தாக்கிக் கொண்டு இருக்கும்...

அவரிடம் பறக்கும் குதிரைகள் இருப்பதாக ஆங்கிலேயத் தளபதிகள் நிஜமாக நம்பினார்கள்..

திப்புசுல்தானை தோற்கடித்த டியூக் வெல்லிங்கடன் தான்  அவருடைய நண்பரான நெப்போலியனையும்  தோற்கடித்தவர்..

திப்புசுல்தானிடமும் ஹைதர் அலியிடமும் பிரதம மந்திரியாக வேலை பார்த்த  பூரணைய்யா  பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்..

தென்னிந்தியாவில் உள்ள எல்லா கோட்டைகளையும் புனரமைத்து நிர்வகித்த பெருமையும் திப்புசுல்தானையே சாரும்..

தீரன் சின்னமலையும் துந்தாஜிவாகும் திப்புவின் குதிரைப்படையில் பணி புரிந்த வீரர்கள்..

திப்புவின் நிகரற்ற தைரியத்தையும் வீரத்தையும் பார்த்து நடுங்கிய ஆங்கிலேயர்கள் அவரை "மைசூர் புலி"என்று மிரட்சியோடு அழைத்தார்கள்..

மார்க்சின் பிறந்தநாளும் திப்புவின் இறந்த நாளும் ஒரே தினம் என்பது இன்னொரு சிறப்பு.....

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இருந்த திப்புவின் அரண்மனையை. இடித்துத் தகர்க்காவிட்டால் அந்த அரண்மனையின் செங்கல் கூட இந்தியர்களை ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்ற தேசப்பக்தியை ஊட்டி விடும் என்று பயந்து அரண்மனை இருந்த அடையாளமே இல்லாமல் ஆங்கிலேயர்கள் தகர்த்து எறிந்த அரண்மனையும் திப்புவின் அரண்மனையே...

அது தான் இந்தியாவில் நடந்த முதல் கரசேவை..

நெப்போலியன் கொடுத்த வாக்குறுதிப்படி படை உதவியை திப்புசுல்தானுக்கு அனுப்பி வைக்க முடிந்து இருந்தால் பிரிட்டிஸ்காரர்கள் 1799.லேயே கப்பல் ஏறி இருப்பார்கள்..

கேரளத்தில் எல்லாப் பெண்களும் மேலாடை அணிய வேண்டும் என்று சட்டமியற்றி தோள் சீலை வரி செலுத்திக் கொண்டு இருந்த இந்துப் பெண்களின் மானம் காத்த பெருமையும் திப்புசுல்தானையே சாரும்...

இறுதியில் 50,000 படைகளுடன் வந்த ஆங்கிலேயர்களை 30,000 வீரர்கள் கொண்ட படைகளுடன் வீரத்தோடு எதிர் கொண்டு வீர மரணம் அடைந்தார்..

Comments

Popular posts from this blog

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் ரெஹான என்னும் காயத்திரி

கையும் காலுமாக மாட்டிக்கொண்டது ஓநாய் விஷ்வ ஹிந்து பரிஷத் ( VHP) அமைப்பில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவர் ரேஹானா.. ரெஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை நுழைவதாக செய்தி வந்தது. அவர் பெயரை கேட்டதும்  முஸ்லீம் பெண் என பலரும் குதித்தார்கள். இப்போது ஆங்கில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிட்டுள்ளனர். சூர்ய காயத்ரி என பெயர் மாற்றிக்கொண்ட அந்த பெண் VHP என்று சொல்ல கூடிய ( விஷ்வ ஹிந்து பரிஷத் ) அமைப்பில் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றது ஆங்கில ஊடகங்கள் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் என அனைத்து ஊடகங்களும் வெளிட்டுள்ளது.. ஆதாரம் இதோ :-  ( முழுமையாக படியுங்கள் மக்களே ), http://indianexpress.com/article/india/sabarimala-women-temple-entry-rehana-fathima-5409974/ http://dhunt.in/4SAyq?s=a&ss=wsp 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய  ரெஹானா பாத்திமா என்னும் காயத்ரி ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் மனோஜ் என்னும் ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறாள். மதம் மாறியது பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை...

தேவர் மகனை பற்றிய பதிவு ( அக்டோபர் - 30 இறப்பும் / பிறப்பும் ஒரே நாளில் )

முத்துராமலிங்க தேவர் என்பவர் யார்? அனைத்து சமுதாயத்தவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிவு தயவு செய்து இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி முழுவதும் படிக்கவும். பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர்... அவரை அறியாதவர்கள் இந்த சிறு குறிப்பு மூலம் அறியலாம்... வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல. சில அதிசய சுவாரஸ்யங்களின் தொகுப்பு: அதிசய அரசியல்வாதி: தேவர் போட்டியிட்ட தேர்தல்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை. -நேதாஜியும்,தேவரும் காந்தியை எதிர்த்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஃபார்வர்டு ப்ளாக் கட்சியைத் துவக்கினர். கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார் தேவர். -அன்று வெள்ளையர்களை அஞ்சி நடுங்கச் செய்து நாட்டை விட்டே விரட்டிய "இந்திய தேசிய ராணுவத்தில்" இருந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் தேவரின் ஒற்றை சொல்லுக்காகப் போராடச் சென்றவர்கள். -நேரு விலை பேசிய முதல்வர் பதவியை வேண்டாம் என்று மறுத்தவர். -3 முறை MP யாகவும் 3 முறை MLA யாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவர். -பிரச்சாரம் என்று தன் தொகுதிப் பக்கம் சென்றதே இல்லை. கட்சியின் மற்ற வேட்பாளர்களின் தொகுதிக்கே பிரச்சாரம் செய்வார். ...

மோட்டார் வாகன சட்டம்

வாகன ஓட்டிகளின் உரிமைகள் என்னென்ன? சாலையில் செல்கின்ற வாகனங்களை தணிக்கைசெய்வதற்காக போக்குவரத்து காவலர்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சில வேளைகளில்பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தி விடுகிறது. வாகன ஓட்டிகளுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொண்டால், அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு பயப்பட வேண்டியதே இல்லை.  அங்கே, இங்கே என்று அலைய வேண்டுமே! என்றுதான் உரிய ஆவணங்கள் இல்லாத அல்லது ஹெல்மேட் போடாத வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவலர்கள் நிற்கச் சொல்லியும் நிற்காமல் போகிறார்கள். இதனால் தேவையில்லாமல் தங்களது உயிரையும் இழக்கிறார்கள். ஆனால், இதுபோன்று போக்குவரத்து காவலர்கள் நிறுத்தும்பட்சத்தில், தங்களுக்குள்ள உரிமைகளை வாகன ஓட்டிகள் தெரிந்து வைத்துக் கொண்டால், இது போன்ற சம்பவங்கள் கண்டிப்பாக நிகழாது. வாகன தணிக்கை யார் செய்ய முடியும்? சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லதுபோக்குவரத்து துறை அதிகாரி  ஆகியோர் எந்தவொருவாகனத்தையும் ஆய்வு செய்யலாம். போக்குவரத்து வாகனச் சட்டம் பிரிவு 130 ன் கீழ் இதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. உங்கள் வாகனத்தைஆய்வுக்காக அவர்கள...